சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்
நியாயமற்ற பாலின சொற்றொடர் கையேடு: உச்சநீதிமன்றம் வெளியீடு
- நியாயமற்ற பாலின வார்த்தைகள் மற்றும் அதற்கான மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் அடங்கிய கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
- வழக்கு விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளில் பெண்கள் குறித்த ஒரே மாதிரியான சொற்றொடர்களை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு இந்தக் கையேடு உதவும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.
- இதன் மூலமாக, மனுக்கள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து சட்ட ஆவணங்களிலும் இந்த மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர் பயன்பாடு நடைமுறைக்கு வரும். நியாயமான, சமத்துவ தீர்ப்பை நீதிபதிகள் எழுதுவதை இந்தக்கையேடு உறுதிப்படுத்தும்.
முக்கிய அம்சங்கள்
- பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்குப் பதிலாக ‘பெண்’ என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவேண்டும்.
- ஏற்கெனவே உள்ள சர்ச்சை வார்த்தைகளுக்கு பதிலாக “பாலியல் தொழிலாளர்” என்ற சொற்றொடரையும் திருமண உறவைக் கடந்து ஆணுடன் பாலியல் உறவு கொண்டிருக்கும் பெண் என்ற சொற்றொடரடையும், ‘திருமணம் செய்துகொள்ளாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தை’ என்ற சொற்றொடரையும் பயன்படுத்த இந்தக் கையேடு பரித்துரைத்துள்ளது.
- ‘ஈவ் டீசிங்’ என்ற வார்த்தைக்கு மாற்றாக “தெரு பாலியல் துன்புறுத்தல்“ என்ற சொற்றொடரை பயன்படுத்தவும் இந்தக் கையேடு பரிந்துரைத்துள்ளது.
- ஆங்கிலத்தில் ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘ஹோம் மேக்கர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி
- நிறுவப்பட்டது – அக்டோபர் 1, 1937
- இந்திய தலைமை நீதிபதி – தனஞ்சய ஒய். சந்திரசூட்
- மொத்த எண்ணிக்கை – 34 (33+1)
- அரசியலமைப்பு விதிகள் – சரத்து 124 – 147
மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்
பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டம்
- இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.20,000 கோடியை வழங்க உள்ளது.
- இந்தியா முழுவதும் 169 நகரங்களில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும்.
- 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.