Tag: விருதுகளும் கௌரவங்களும்

வரலாறு

புகழ்பெற்ற நபர்கள் தியாகி சங்கரலிங்கனார் 1956ல் காங்கிரஸ் தலைவர் கே.பி.சங்கரலிங்கம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கைகளில் ஒன்று. சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், இதன் விளைவாக அக்டோபர் 13, 1956 இல் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரலிங்கனாரின் மரணம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான போராட்டத்தை மேலும் தூண்டியது. அதன் விளைவு ஜுலை 18, 1967 அன்று மாநில சட்டபேரவையில் முதல்வர் அண்ணாதுரை ஒரு தீர்மானத்தை தயாரித்தார். தமிழ்நாடு என்ற பெயர் ஒருமனதாக ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுபெயரிடுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்பட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முறையே நவம்பர் மற்றும் டிசம்பர் 1968 இல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன. பின்னர் மாநில அரசு ஜனவரி 14, 1969 அன்று பெயர் மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வர அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. விளையாட்டு சாத்விக் புதிய சாதனை இந்திய பாட்மின்டன் வீரர் சாத்விக்சாய் ராஜ் மணிக்கு 565 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்மாஷ் விளாசி புதிய ”கின்னஸ்“ உலக சாதனை படைத்திருக்கிறார். போட்டியில் அல்லாமல் சாதனை முயற்சிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சூழலில் அவர் இந்த சாதனையை எட்டியிருக்கிறார். ஜப்பானின் சாய்டாமா நகரில், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான யோனெக்ஸின் உற்பத்தி தொழிற்சாலை விளையாட்டரங்கில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரிகள் அங்கீரித்துள்ளனர். விருதுகளும் கௌரவங்களும் சர்வதேச எனி விருது மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-M) வேதியியல் துறைப் பேராசிரியரான T. பிரதீப் சர்வதேச எனி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது இத்தாலிய எரிசக்தி நிறுவனமான எனி நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது நீரிலிருந்து நச்சு அசுத்தங்களை அகற்றுவதற்கான நிலையான மற்றும் மலிவு நானோ அளவிலான பொருள் பற்றிய அவரது பணிக்கான அங்கீகாரமாகும். கடந்த காலத்தில் இவ்விருதை சில நோபல் பரிசு பெற்றவர்களும் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர்.ராவ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

முக்கிய தினங்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26 2023 கருப்பொருள்: ”முதலில் மக்கள் :  களங்கத்தையும் பாகுபாட்டையும் நிறுத்துங்கள், தடுப்பை வலுப்படுத்துங்கள்”. விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக் 2023 2023 ஜுன் 17 முதல் 25 வரை, ஜெர்மனியின் பெர்லின், சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு 7,000 வீரர்களையும், சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களை 26 விளையாட்டுகளில் போட்டியிட வரவேற்கிறது. 2023 சிறப்பு ஒலிப்பிக்கில் இந்தியா 150 பதக்கங்களைக் கடந்தது. சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2023 இன் இறுதி நாளில் இந்திய அணி 157 பதக்கங்களை (தங்கம்: 66; வெள்ளி: 50; வெண்கலம்: 41) பெற்றுள்ளது. ஓபன் கோல்ப் போட்டி டிப்ஸ்போர்ட்ஸ் செக் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் வாகை சூடிய இந்தியாவின் தீக்ஷா தாகர், மகளிருக்கான ஐரோப்பிய டூர் போட்டிக்களில் தனது 2-ஆவது பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். விருதுகளும் கௌரவங்களும் பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயிரிய விருது எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி வழங்கி கௌரவித்தார். எகிப்து நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் ஈடு இணையற்ற சேவைகளை வழங்கும் நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், துணை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு ”ஆர்டர் ஆஃப் தி நைல்” விருதை எகிப்து வழங்கி வருகிறது. 1915-ஆம் ஆண்டு முதல் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பு பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு. இது 13-ஆவது விருதாகும். கடந்த 9 ஆண்டுகளில் பப்புவா நியூ கினியா, ஃபிஜி, பலாவு குடியரசு, பூடான், அமெரிக்கா, பஹ்ரைனை், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். போர் நினைவிடத்தில் மரியாதை: முதலாம் உலகப்போரின் போது எகிப்து மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளில் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த சுமார் 4,000 இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். எகிப்து பற்றி ஜனாதிபதி - அப்தெல் ஃபத்தா எல்-சிசி பிரதமர் - முஸ்தபா கமால் மட்பௌலி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட்

வரலாறு

உலக அமைப்புகள் – ஒப்பந்தங்கள் மற்றும் மாநாடு வர்த்தகப் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் வர்த்தகப் பிரச்னை தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) தொடரப்பட்டுள்ள 6 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. பின்னணி: இந்திய எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த 2018-ஆம் ஆண்டில் முறையே 25 சதவீதம், 10 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்பிள், போரிக் அமிலம், பாதாம் உள்ளிட்ட 28 அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை விதித்தது. வர்த்தகப் பிரச்னை தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா, அமெரிக்கா சார்பில் தலா 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. WTO பற்றி தலைமை இயக்குநர் – என்கோசி ஒகோன்ஜோ-இவேலா தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது – 1 ஜனவரி 1995 விருதுகளும் கௌரவங்களும் சாகித்திய அகாதெமி இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ”யுவ புரஸ்கார்” விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான ”பால சாகித்திய புரஸ்கார்” விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி வருகிறது. தமிழ் மொழிப் பிரிவில் ”திருக்கார்த்தியல்” எனும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கரின் ”ஆதனின் பொம்மை” எனும் நாவலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குறிப்பு: இலக்கிய உலகில் உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாதெமி விருது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பல்கலை.க்கு விருது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த மாநில பல்கலைக்கழக விருதை பால்வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் வழங்கினார்.