முக்கிய தினங்கள்
தேசிய ஊட்டச்சத்து வாரம் (பாரத ஊட்டச்சத்து வாரம் என்றும் அழைக்கப்படுகிறது)
- தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை அனுசரிக்கப்படுகிறது
- குறிக்கோள் – மனித உடலுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- கருத்துரு 2023 – “அனைவருக்கும் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு”.
குறிப்பு
- இந்திய அரசு 1982 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை நடத்தி வருகிறது.
பாதுகாப்பு
INS மகேந்திரகிரி
- INS மகேந்திரகிரியை சுதேஷ் தன்கர் மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸில் நாட்டுக்கு அர்பணித்தார் .
- மகேந்திரகிரி என்பது ப்ராஜெக்ட் 17A போர்க் கப்பல்களின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் இறுதி மற்றும் 7வது போர் கப்பல் ஆகும்.
- இது ஒடிசாவில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை உச்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது
புராஜக்ட் 17 ஆல்பா பற்றி
- அறிமுகம் – 2019
- அதிநவீன வழிகாட்டுதல்-ஏவுகணை போர் கப்பல்களின் வரிசையை உருவாக்குதல் (மொத்தம் 7 கப்பல்கள்).
- இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டது
- மும்பை – மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மூலம் நான்கு கப்பல்கள்
- கொல்கத்தா – கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) மூலம் மூன்று கப்பல்கள்.
- மற்ற ஆறு போர்க்கப்பல்கள்
- நீலகிரி – 2019
- ஹிம்கிரி – 2020
- உதயகிரி – 2022
- துனகிரி – 2022
- தாராகிரி – 2022
- விந்தியகிரி – 2023
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
65வது ராமன் மகசேசே விருது 2023
- அஸ்ஸாமில் உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (CCHRC) இயக்குநரான அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் ஆர்.ரவி கண்ணன் 2023 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருதாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மக்களை மையப்படுத்திய மற்றும் ஏழை மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மூலம் அசாமில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
மற்ற வெற்றியாளர்கள்
- கோர்வி ரக்ஷந்த் – பங்களாதேஷ்
- யூஜெனியோ லெமோஸ் – திமோர்-லெஸ்டே
- மிரியம் கரோனல்-ஃபெரர் – பிலிப்பைன்ஸ்
ராமன் மகசேசே விருது பற்றி
- உருவாக்கம் – ஆகஸ்ட் 31, 1957
- பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வழங்கப்படுகிறது.
- ஆசியாவின் மக்களுக்குச் சேவை செய்வதில் காட்டப்படும் மகத்துவத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
- அரசு சேவை
- பொது சேவை
- சமூக தலைமை
- பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு கலைகள்
- அமைதி மற்றும் சர்வதேச புரிதல்
- அவசர தலைமை
குறிப்பு
- 1958 இல் சமூகத் தலைமைப் பிரிவின் கீழ் ராமன் மகசேசே விருதை வென்ற முதல் இந்தியர் ஆச்சார்யா வினோபா பாவே.
நியமனங்கள்
இரயில்வே வாரியத்தின் தலைவரான முதல் பெண்மணி
- இரயில்வே அமைச்சகத்தின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் அனில் குமார் லஹோட்டிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இரயில்வே வாரியத்தின் 118 வருட வரலாற்றில் (1905 முதல்) தலைவரான முதல் பெண்மணி ஆவார்.
ரயில்வே வாரியத்தின் வரலாறு
- சர் தாமஸ் ராபர்ட்சன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1901 இல் உருவாக்கப்பட்டது.
- 1905 இல், கர்சன் பிரபுவின் அரசாங்கத்தால் அதன் அதிகாரங்கள் முறைப்படுத்தப்பட்டன.