Tag: உலகளாவிய AI உச்சி மாநாடு

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் – டிசம்பர் 2 டிசம்பர் 2, 1984 அன்று போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அசுத்தமான நீர், நிலம் மற்றும் காற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  "சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கான நிலையான வளர்ச்சி" என்பதாகும். விருதுகள் மற்றும் கௌரவங்கள் சாகித்ய அகாடமி விருது 2024 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் ராஜசேகரன் ஆகும். நியமனங்கள் ராஜஸ்தான் புதிய முதல்வர் ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா  தேர்ந்தெடுக்கப்பட்டார். தியா குமாரி  மற்றும் பிரேம்சந்த் பைரவா  ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள் உலகளாவிய AI உச்சி மாநாடு செயற்கை நுண்ணறிவுக்கான வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை (GPAI) உச்சிமாநாடு புது தில்லியின் பாரத் மண்டபத்தில் தொடங்கப்பட்டது, இதில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச்  சவால்கள் போன்ற AI சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. 2024 இல், GPAI குழுமத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது.