இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
-
- வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை.
- தொடர்ந்து Repo வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது.
- கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக ஆர்பிஐ நிர்ணயித்தது.
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – 3.35%
RBI பற்றி
-
- தலைமையகம் – மும்பை
- ஆளுநர் – சக்திகாந்த தாஸ்
- நிறுவப்பட்டது – 1 ஏப்ரல் 1935
குறியீடுகள்
உணவு பாதுகாப்பு குறியீடு 2023 : கேரளா, பஞ்சாப் முன்னிலை, தமிழ்நாடு 3வது இடம்
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 5வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI), உலக உணவு தினத்தை முன்னிட்டு ஜுன் 7 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் வெளியிடப்பட்டது.
பெரிய மாநிலங்களில்:
- 2022-23 உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழகம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- பஞ்சாப் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சிறிய மாநிலங்களில்:
- தொடர்ந்து நான்காவது முறையாக கோவா முதலிடம் பிடித்தது.
- அதைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன.
- கடந்த ஆண்டும் இந்த மூன்று மாநிலங்களும் இதே நிலையில்தான் இருந்தன.
யூனியன் பிரதேசங்களில்:
- ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- கடந்த ஆண்டும் மூன்று யூனியன் பிரதேசங்களும் இதே நிலைகளை பெற்றிருந்தன.
குறிப்பு
- 2021-22 ஆம் ஆண்டில் 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இருந்தன.
- 2020-21ல் குஜராத் முதலிடத்திலும், கேரளாவை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இருந்தது.
மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2018-19 இல் தொடங்கப்பட்டது.
- குறிக்கோள் – நாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குதல்.
- FSSAI என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இது மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்கிறது.