அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் தென் இந்தியா வளர்ச்சியடையும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
-
- குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் இந்தியா பெரிதும் வளர்ச்சியடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
- விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சந்திராயன் – 3 விண்ணில் செலுத்தப்படுவதற்கு தயாராகி வருகிறது.
- இதேபோல, சூரியன் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ஆதித்யா 1 விண்கலமும் தயாராகி வருகிறது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவு பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் குறைவு என்பதால், அண்டை நாடுகள் நம் நாட்டிலிருந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துகின்றன. மேலும், நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிற நாடுகள் அவர்களுடைய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ விரும்புகிறார்கள்.