அரசு நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’
- ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அடிமட்ட அளவில் உள்ள தொழில் முனைவோரை ஊக்குவிக்க 1,80,630 பயனாளிகளுக்கு 40,700 கோடிக்கும் மேலாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஏப்ரல் 5, 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம், பொருளாதார வலுவூட்டல் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் (sc) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினரிடையே தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காகவும், உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறையிலும், விவசாயம் தொடர்பான செயல்பாடுகளிலும் பசுமை நிறுவனத்தைத் தொடங்க அவர்களுக்கு உதவுவதற்காகவும் ஸ்டாண்ட்-அப் இந்தியா நிறுவப்பட்டது.
- SC, ST மற்றும் பெண் தொழில்முனைவோர் தங்கள் கனவை நிஜமாக்குவதில் சந்திக்கும் சிரமங்களை களைவதற்காக தொடங்கப்பட்டது.