'உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ புகையிலை நுகர்வினால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும், புகையிலை மற்றும் நிக்கோட்டின் மீதான சார்பைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சிகளை உலகளாவிய அளவில் ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ‘Unmasking the Appeal: Countering Nicotine and Tobacco Addiction’ என்பது 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளாகும். வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளி யிடப்பட்டது.இந்திய அஞ்சல் துறை சார்பில் கலாசார, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை பிபிசி வழங்கப்படுகிறது. "மக்களுக்கான காய சிகிச்சை (அவசர மருத்துவப் பராமரிப்பு) என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையின் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சில இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில், நாடு முழுவதும் அவசர காலச் செயல்பாடுகளுக்காக '112' என்ற ஒரே ஒரு பொதுவான உதவி எண்களை நடைமுறைப்படுத்துவதும் அடங்கும்." சமாதான் திதி இது போன்ற முதல் முயற்சியாக, இந்திய அரசு, மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புக்காக , செயற்கை நுண்ணறிவு ( மூலம் இயங்கும், குரலுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு உரையாடல் தொழில்நுட்பமான “சமாதான் திதி”-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பேசுவதன் மூலம் எளிமையாகக் குறைகளைப் பதிவு செய்ய உதவுகிறது. குறிப்பாக, புகாரை எங்கு சமர்ப்பிப்பது அல்லது யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாதவர்கள், மற்றும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் புகார்களை எழுத இயலாதவர்கள் போன்ற குடிமக்கள் எளிதாகக் குறைகளைப் பதிவு செய்ய உதவும் வகையில் இந்த உரையாடல் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகம், "பொதுக் குறைதீர்ப்பு அமைப்பின் ஜனநாயகமயமாக்கல்" என வர்ணிக்கப்படுகிறது. இது, குடிமக்கள் பொதுச் சேவைகளை எளிதில் அணுகுவதை மேம்படுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கொடி ஏற்பு (1921) பிற்காலத்தில் தேசியக் கொடியாக உருவெடுத்த இந்திய தேசிய காங்கிரஸின் கொடி, 1921 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்த இக்கொடி, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான நாட்டின் போராட்டத்திற்குப் பெரும் உத்வேகம் அளித்தது.
முக்கிய தினங்கள்
வரலாறு
முக்கிய தினங்கள் உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2024 புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: “Protecting Children from Tobacco Industry Interference” இந்த நாள் முதன்முதலில் 1987 இல் உலக சுகாதார அமைப்பால் (WHO) அனுசரிக்கப்பட்டது. WHO கருத்தின்படி, இந்தியாவில் இறப்பு மற்றும் நோய்களுக்கு புகையிலை பயன்பாடு ஒரு முக்கிய காரணமாகும், இது ஆண்டுதோறும் 35 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகும்.
வரலாறு
முக்கிய தினங்கள் உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31 இது புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1987 - இல் உலகளாவிய அனுசரிப்பு தினத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. முதல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31, 1988 அன்று அனுசரிக்கப்பட்டது. 2023 இன் கருப்பொருள் ”எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”. குறிப்பு சீனாவுக்கு அடுத்தபடியாக பீடி, சிகரெட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. விருதுகள் மற்றும் கௌரவங்கள் 57வது ஞானபீட விருது புகழ்பெற்ற கொங்கனி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான தாமோதர் மௌசோ 57 வது ஞானபீட விருதை வென்றார். ஆண்டுதோறும் வழங்கப்படும் ஞானபீட விருது மிகப் பழமையான மற்றும் மிக உயர்ந்த இந்தியா இலக்கிய விருது. இது பாரதிய ஞானபீட இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் வழங்கப்படுகிறது. இது புது தில்லியில் உள்ளது. தாமோதர் மௌஸோவுக்கு 1983 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த இலக்கிய விருதை வென்ற முதல் கொங்கனி எழுத்தாளர் ரவீந்திர கெலேகர் (2006-இல்) ஆவார். அஸ்ஸாமி கவிஞர் நில்மணி பூகன் 56வது ஞானபீட விருதை வென்றார். பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார்.

