Tag: உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

வரலாறு

முக்கிய தினங்கள் உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31 இது புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1987 - இல் உலகளாவிய அனுசரிப்பு தினத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. முதல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31, 1988 அன்று அனுசரிக்கப்பட்டது. 2023 இன் கருப்பொருள் ”எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”. குறிப்பு சீனாவுக்கு அடுத்தபடியாக பீடி, சிகரெட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. விருதுகள் மற்றும் கௌரவங்கள்  57வது ஞானபீட விருது புகழ்பெற்ற கொங்கனி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான தாமோதர் மௌசோ 57 வது ஞானபீட விருதை வென்றார். ஆண்டுதோறும் வழங்கப்படும் ஞானபீட விருது மிகப் பழமையான மற்றும் மிக உயர்ந்த இந்தியா இலக்கிய விருது. இது பாரதிய ஞானபீட இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் வழங்கப்படுகிறது. இது புது தில்லியில் உள்ளது. தாமோதர் மௌஸோவுக்கு 1983 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த இலக்கிய விருதை வென்ற முதல் கொங்கனி எழுத்தாளர் ரவீந்திர கெலேகர் (2006-இல்) ஆவார். அஸ்ஸாமி கவிஞர் நில்மணி பூகன் 56வது ஞானபீட விருதை வென்றார். பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார்.