Tag: நீதிபதிகள் விசாரணைக்குழு

இந்திய அரசியல்

நீதிபதிகள் விசாரணைக்குழு சூழல்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான புகார்கள் குறித்த தனது அறிக்கையை நீதிபதிகள் விசாரணைக்குழு, மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. நீதிபதிகளின் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கான சட்டப் கட்டமைப்பை வழங்கும், நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இப்புகார்களை ஆய்வு செய்வதற்காக 2025 ஆகஸ்ட் 12 அன்று மக்களவை சபாநாயகரால் இந்தக்குழு அமைக்கப்பட்டது. சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி இந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படும். நீதிபதிகள் பதவி நீக்கம் பற்றி  நீதிபதிகள் "பதவி நீக்கம்" என்பது, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது செயலற்ற தன்மைக்காக உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முறையான நடைமுறையைக் குறிக்கிறது.  இது அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, அதே நேரத்தில் நீதித்துறையின் பொறுப்புணர்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான சட்டக் கட்டமைப்பு இந்திய அரசியலமைப்பின் 124(4) மற்றும் 218 ஆகிய சரத்துகளுடன், 'நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968'-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், " பதவி நீக்கம் " என்ற வார்த்தை அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. பதவி நீக்கத்திற்கான காரணங்களில் "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை"  மற்றும் "செயலற்ற தன்மை" ஆகியவை அடங்கும். இந்த நடைமுறை நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் தீர்மானத்துடன் தொடங்குகிறது. இதற்கு மக்களவையின் 100 எம்பிக்கள் அல்லது மாநிலங்களவையின் 50 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது, மேலும் இதனை சபாநாயகர் அல்லது தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். விசாரணைக் குழு: தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 1968 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இதில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி (அல்லது தலைமை நீதிபதி), ஓர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சிறந்த சட்ட அறிஞர் ஆகியோர் இடம்பெறுவார்கள். நாடாளுமன்ற ஒப்புதலும் குடியரசுத் தலைவர் ஆணையும்: இக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, இரு அவைகளிலும் "சிறப்பு பெரும்பான்மை" மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாகக் குடியரசுத் தலைவர் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிப்பார்.   மண்டல மன்றம் சூழல் : சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெறும் மத்திய மண்டல மன்றக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இக்கூட்டத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். மண்டல மன்றங்கள் பற்றி மொழிப் பகைமைகளைக் களைவதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் 1956-ல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்டது. சட்ட அடிப்படை: 1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டப்பூர்வமான (அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட) ஆலோசனைக் குழுக்களாக நிறுவப்பட்டது. நோக்கம்: பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பது. தன்மை: இது வெறும் கலந்தாலோசனை மற்றும் ஆலோசனை சார்ந்தது, பரிந்துரைகள் கட்டுப்படுத்தக்கூடியவை அல்ல. தலைவர்: மத்திய உள்துறை அமைச்சர் (அனைத்து மண்டல மன்றங்களுக்கும் பொதுவான…