Tag: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்

தமிழ்நாடு

ஆத்தூர் வெற்றிலை - புவிசார் குறியீடு புவிசார் குறியீடுகள் பதிவகமானது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீட்டினை வழங்கியுள்ளது. இந்த வெற்றிலையானது தாமிரபரணி நதிநீரினால் வளமூட்டப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டின் புத்தகமான "மார்கோபோலோவின் பயணங்கள்” என்ற புத்தகத்திலும் இந்த வெற்றிலைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அம்மாவட்ட நிர்வாகத்தினால் கயத்தாறு எலுமிச்சை, ஸ்ரீவைகுண்டம் வாழை, உடன்குடி கருப்பட்டி ஆகியவற்றின் புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்காகவும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்கள் உள்ளிட்ட தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேயர்களுக்கு மாதம் 30,000 ரூபாயும், அதன் துணை மேயர்களுக்கு 15,000 ரூபாயும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு 15,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் அவர்களது பதவிக் காலம் முழுமைக்கும் என்ற வகையில் பேரூராட்சித் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.