Tag: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் நிலைத்தன்மை பற்றிய அறிக்கை

பொருளாதாரம்

குறியீடுகள்  கையால் துப்புரவு பணி மேற்கொள்தல் - அறிக்கை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்திய ஆண்டுகளில், 'சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்தல்' மரணங்களை கட்டுபடுத்தியது. நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 508 மாவட்டங்களில் (66%) மட்டுமே கையால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படுவது இல்லை என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 58,000 பாதாள சாக்கடைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.40,000 ரூபாய் ஒருமுறை இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அவர்களில் சுமார் 22,000 பேர் (பாதிக்கும் குறைவானவர்கள்) திறன் பயிற்சி திட்டங்களுடன் இணைக்கப் பட்டுள்ளனர். கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுத் திட்டமானது, கழிவகற்றும் பணியை 100% இயந்திரமயமாக்கும் நமஸ்தே எனும் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமஸ்தே பற்றி இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) என்பது துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும். இந்தத் திட்டம் 2022 - இல் தொடங்கப்பட்டது மற்றும் பாதுகாப்பற்ற கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நடைமுறைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் நிலைத்தன்மை பற்றிய அறிக்கை  இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 2021-22 நிதியாண்டுக்கான நிலைத் தன்மைப் பற்றிய முதல் அறிக்கையானது, NHAI அமைப்பின் நிர்வாக அமைப்பு, பங்குதாரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் பல சமூகப் பொறுப்பு முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. முக்கிய சிறப்பம்சங்கள் குறைந்த எரிபொருள் நுகர்வு மூலம் 2019-20 நிதியாண்டில் இருந்து 2021-22 ஆம் ஆண்டு வரை நேரடி உமிழ்வு முறையே 18.44 சதவிகிதமும் 9.49 சதவிகிதமும் குறைக்கப் பட்டது. ஆற்றல் நுகர்வு, செயல்பாடுகள், போக்குவரத்து மற்றும் பயணம் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வின் அளவு 2020-21 நிதி ஆண்டில் 9.7% மற்றும் 2021-22 நிதியாண்டில் 2% என்ற அளவில் குறைந்துள்ளது.