Tag: தமிழக கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது

தமிழ்நாடு

'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை 1.3 சதவீதம் குறைந்துள்ளது. 'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48' திட்டத்தின் மூலம் கடந்த 15 மாதங்களில் தமிழகம் முழுவதும் சாலை விபத்தில் சிக்கிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர் காக்கப்பட்டுள்ளது. திட்டம் பற்றி: தொடக்கம்   டிசம்பர் 18 ,2022  நோக்கம்  விபத்து   நேர்ந்தவுடன் விபத்துக்குள்ளானவர்க்கு   முதல் 48 மணி  நேரத்துக்கு தமிழ்நாட்டின் அரசு சார்பில் ஒரு லட்சம் வரை செலவிடப்பட்டு அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுதல். இத்திட்டத்திற்காக தமிழ் நாட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் 500 இடங்களை சுற்றியுள்ள 235 அரசு மருத்துவ மனைகள், 448 தனியார் மருத்துவ மனைகள் என, 683 மருத்துவமனைகள் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன. தமிழக கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது தமிழ்நாடு கைதிறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் 243 கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 05 கைவினைஞர்கள் தினமாக அறிவித்துள்ளது.