Tag: குடிநீர் பாட்டில்களுக்கு அஸ்ஸாம் தடை

தினசரி தேசிய நிகழ்வு

குடிநீர் பாட்டில்களுக்கு அஸ்ஸாம் தடை அஸ்ஸாமில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் தலைநகர் டிஸ்பூரில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  பாலிஎத்திலின் டெரெஃபெலேட் மூலம் தயாரிக்கப்படும் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு அக்டோபர் முதல், மாநிலத்தில் 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படும். பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-இன்படி, ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கான தடையும் மாநிலத்தில் கடுமையாக அமல்படுத்தப்படும் பாலிஎத்திலின் டெரெஃபெலேட் என்பது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகைபாலியஸ்டராகும். அசாம் பற்றி கவர்னர் – குலாப் சந்த் கட்டாரியா முதல்வர் – ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைநகரம் – திஸ்பூர்