Tag: ”எண்ணும் எழுத்தும்” திட்டம்

அரசியல்

அரசு நலத்திட்டங்கள் ”எண்ணும் எழுத்தும்” திட்டம் ”எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் கீழ் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிய அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சர்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை ”எண்ணும் எழுத்தும்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக கற்றல் பாதிக்கப்பட்ட 8 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே கற்றல் இடைவெளியைக் குறைக்க. 2022 ஜுன் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார்.  திருவள்ளுரில் உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2022-23 கல்வியாண்டிலிருந்து இப்பணி நடைபெறுகிறது. நோக்கம் -2025க்குள் அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் உறுதி செய்வது. திட்டத்தின் கூறுகள் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும். கல்வித்துறை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பயிற்சி புத்தகங்களை வழங்குகிறது.