மாநிலங்களவை விதி 267 இன் வரம்புகள் சூழல்: மாநிலங்களவைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், டிசம்பர் 05, 2025 அன்று விதி 267 இன் வரம்புகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மாநிலங்களவை விதி 267 இன் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம். இந்த விதியின் கீழ் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களவையின் அன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இருப்பினும், இந்த விதியைச் செயல்படுத்த மாநிலங்களவைத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகும். மாநிலங்களவை விதி 267 பற்றி இது 2000 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. அதன்படி, மாநிலங்களவையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட விவகாரங்களை மட்டுமே விதி 267 இன் கீழ் விவாதிக்க முடியும். வேறு எந்த விவகாரங்களையும் விவாதிக்க முடியாது. இந்த விதியின் கீழ் 1988 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையில் 3 அறிவிப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுவரையில் ஒருமனதாக 8 வழக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

