Tag: 100 நாள் வேலைத் திட்டம்: 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் நிர்வாகம் 100 நாள் வேலைத் திட்டம்: 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து கடந்த நிதியாண்டில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ். 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 1,49,51,247 பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. இது 2022-23-ஆம் நிதியாண்டில் 247 சதவீதம் அதிகரித்தது. அந்த நிதியாண்டில் 5,189,168 பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானாவில் அதிக எண்ணிக்கையில் பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. போலி பணி அட்டைகள், திட்டத்தின்கீழ் தொடர்ந்து பணியாற்ற மக்கள் விரும்பாதது, கிராம ஊராட்சியில் இருந்து குடும்பத்துடன் நிரந்தரமாக இடம்பெயர்ந்தது, பணி அட்டை பெற்ற நபர் காலமானது போன்ற காரணங்களால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.  சத்தீஸ்கரில் இருந்து ST பட்டியலை விரிவுபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சத்தீஸ்கரில் இருந்து பல சமூகங்களை ST பட்டியலில் சேர்க்க அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (ஐந்தாவது திருத்தம்) மசோதா, 2022 ஐ ராஜ்யசபா நிறைவேற்றியது. இந்த மசோதா பல பழங்குடி குழுக்களின் இந்தி மற்றும் ஆங்கில எழுத்துப்பிழைகளில் உள்ள பல முரண்பாடுகளை சரி செய்யும் மற்றும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்கு உதவும். குறிப்பு - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா. குறிப்பு தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் - சட்டப்பிரிவு 338A