Tag: விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை

அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி  மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் இந்திய அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவு  செய்வதற்காக களப்பணி  செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய நாடு தழுவிய பிரச்சாரமாகும். மக்களுடன் முதல்வர் திட்டம் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை டிசம்பர் 18, 2023 அன்று மாநிலம் தழுவிய அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மக்களின் மனுக்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான தீர்வுகளை உறுதி செய்வதையும், பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் 13 துறைகள் தொடர்பான சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.