Tag: பொதுத் தேர்தலில் உள்ள சவால்கள்

அரசியல் அறிவியல்

பொதுத் தேர்தலில் உள்ள சவால்கள் தேர்தல் பத்திரங்கள் (EBs)   இது உறுதிமொழிப் பத்திரம் போன்ற கொடையளிக்கும் அமைப்பு முறையாகும். இது அரசியல் கட்சிகளுக்குத் தங்கள் பங்களிப்பை நன்கொடையாக வழங்குவதற்காக கொடையாளிக்குக் கொடுக்கப்படும். இந்த பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட வங்கி எஸ்பிஐ மட்டுமே. தேர்தல் பத்திரங்கள் பற்றி இந்தியாவின் குடிமகன் அல்லது இந்தியாவை அடிப்படையாக கொண்ட அமைப்பு பத்திரத்தை வாங்க தகுதி பெறும். பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000, ரூ.10,000, ரூ.1,00,000, ரூ.10,00,000 மற்றும் ரூ.1,00,00,000 ஆகியவற்றின் மடங்குகளில் எந்த மதிப்புக்கும் EBகள் வழங்கப்படுகின்றன/வாங்கப்படுகின்றன. EB களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடை அளிக்க முடியும். மத்திய அரசால் குறிப்பிடப்படும் 10 நாட்களுக்கு ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களில் பத்திரங்கள் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பத்திரத்தை பணமாக்க முடியும். EB அறிமுகத்தின் பின்னணி கணக்கில் காட்டப்படாத அல்லது அரசியல் நிதியில் உள்ள கறுப்புப் பணத்தைத் தடுக்க, பண அடிப்படையிலான பணப் பரிவர்த்தனையிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றுதல். அரசியல் நிதியுதவியில் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்க நன்கொடையாளர் பெயர் தெரியாததை உறுதிசெய்தல். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுலுக்காக வங்கி அமைப்பு மூலம் அரசியல் பங்களிப்புகளை முறைப்படுத்துதல். நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக கட்சி நிதிநிலை அறிக்கைகளில் பத்திர நன்கொடைகளை வெளிப்படுத்துவதை தேர்தல் பத்திர திட்டம் கட்டாயமாக்குகிறது.