கேரளம் - பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் பின்னணி : மத்திய அமைச்சரவை கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, கேரளம் மசோதா 2026-ஐ மாநில சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவர் அனுப்புவார். சட்டப்பூர்வ நடைமுறை மசோதா அரசியலமைப்புச் சட்டம் 8-வது அட்டவணை உட்பட அனைத்து மொழிகளிலும் பெயர் மாற்றத்தை சுட்டிக்காட்டும். மாநில சட்டப்பேரவை ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றும். அனைத்து நடைமுறைகள் முடிந்ததும், “கேரளம்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பட்டியலிடுகிறது. இந்திய அரசியலமைப்பின் சரத்து 3, தற்போதுள்ள மாநிலங்களின் பெயரை மாற்ற ஒன்றியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரளா உருவாக்கப்பட்டது. இத்தகைய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களைக் குடியரசுத் தலைவர் கேட்க வேண்டும். பெயர் மாற்றம் செய்த மாநிலங்கள் ஐக்கிய மாகாணங்கள் உத்தரப் பிரதேசமாக மாற்றப்பட்டது (1950): மறுபெயரிடப்பட்ட முதல் மாநிலம். திருவிதாங்கூர்-கொச்சி கேரளாவாக மாற்றப்பட்டது (1956): மாநில மறுசீரமைப்பின் போது மறுபெயரிடப்பட்டது. மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு (1969): ஜனவரி 14, 1969 அன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. மைசூர் கர்நாடகாவாக மாற்றப்பட்டது 1973 இல் மறுபெயரிடப்பட்டது. உத்தராங்கல் உத்தரகாண்ட் 2007 இல் மறுபெயரிடப்பட்டது.

