Tag: உஸ்பெகிஸ்தான் அதிபர் தேர்தல்

சர்வதேச நிகழ்வுகள்

உஸ்பெகிஸ்தான் அதிபர் தேர்தல்  உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தேர்தல் பார்வையாளராகப் பங்கேற்கிறார். அந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டம் பொதுவாக்கெடுப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. உஸ்பெகிஸ்தான் தேர்தல் ஆணைய தலைவரை தேர்தல் ஆணையர் பாண்டே சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள், இரு நாடுகளுக்கு இடையேயான தேர்தல் தொடர்பான உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து அவர் எடுத்துரைத்தார்.