இரயில் தொழில்நுட்பக் கொள்கை பின்னணி: இரயில்வே அமைச்சர் இரண்டு முக்கியமான சீர்திருத்தங்களை அறிவித்தார் - இரயில் தொழில்நுட்பக் கொள்கை மற்றும் மின்-ஆர்சிடி (இரயில்வே க்ளெய்ம்ஸ் டிரைபியூனல்) இரண்டாம் கட்டம். இவை அரசின் "52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள்" முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இரயில் தொழில்நுட்பக் கொள்கையின் கீழ், அமைச்சர் ஒரு அதிநவீன, 24 மணி நேர இயங்கும் இரயில் தொழில்நுட்க போர்ட்டலை தொடங்கினார். இரயில்வேயில் எழும் புதிய சவால்களை எதிர்கொள்ள தொடக்க நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்துறையினரை இணைக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள் - இந்திய இரயில்வேயின் முக்கிய சீர்திருத்தங்கள்: திறன், நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலில் முறையான முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்பில் கவனம் - விளைவுகளை ஏற்படுத்திய இரயில் விபத்துகள் சுமார் 90% குறைந்துள்ளன (2014-15ல் 135 இருந்தது 2025-26ல் 11 ஆக குறைந்துள்ளது); இதை ஒற்றை இலக்கமாக குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு - பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் இயக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரைவுபடுத்துதல். திறமை மற்றும் பயிற்சி மறுசீரமைப்பு - ஊழியர்களின் திறமை மேலாண்மை மற்றும் திறன் மேம்பாட்டிற்கான புதுமையான முறைகளை ஆராய்தல். உணவு மற்றும் உணவக சேவை மேம்பாடு - சிறந்த உணவு தரம், உணவக சேவை மற்றும் பயண வசதிகளுக்காக பெரும் சீர்திருத்தங்கள். இந்தியா–இஸ்ரேல் பன்முனை வான் பாதுகாப்பு கவசத்திற்கான கூட்டாண்மை பின்னணி:இந்திய பிரதமரின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. குறிப்பாக, மிஷன் சுதர்சன் சக்கரம் என்று முன்மொழியப்பட்ட கட்டமைப்பின் கீழ் மேம்பட்ட ஆயுத தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வுக்குப் பின்னர் இந்த முன்முயற்சி மேலும் அவசரம் பெற்றது. வளர்ந்து வரும் வான் மற்றும் ஏவுகணை சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2035 ஆம் ஆண்டுக்குள் நிறைவடைய இலக்கிட்டு, சுதர்சன சக்கர ஏவுகணை கவசத்தை ஒரு நீண்டகால தேசிய பாதுகாப்பு திட்டமாக இந்தியா உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம், இந்தியாவின் ஏற்கனவே உள்ள S-400, பராக்-8 மற்றும் ஆகாஷ் தளங்களுடன் அயர்ன் டோம், அயர்ன் பீம், அரோ மற்றும் டேவிட்ஸ் ஸ்லிங் போன்ற அதிநவீன அமைப்புகளை ஒருங்கிணைத்து, விரிவான பன்முனை வான் பாதுகாப்பு வலையமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த கவசம், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் நில எல்லைகள் மற்றும் விரிவான கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும். சுதர்சன் சக்கரம் சுதர்சன் சக்கரம் என்பது பல அடுக்குகளைக் கொண்ட, உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வான் பாதுகாப்பு திட்டமாக உருவாக்கப்படுகிறது. இந்த அடுக்கு கட்டமைப்பு, வெவ்வேறு அச்சுறுத்தல் தூரங்கள் மற்றும் உயரங்களில் தடையற்ற பாதுகாப்பை…

