Tag: ஆசிய செஸ் சிறப்பு விருதுகள் 2023

வரலாறு

முக்கிய தினங்கள் சர்வதேச புலிகள் தினம் 2023 இத்தினம் அழிந்து வரும் புலி இனங்கள் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதன்முதலில் 2010 இல் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை 1ன் கீழ் புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. புராஜெக்ட் டைகர் என்பது புலிகள் பாதுகாப்புத் திட்டமாகும். இது பிரதமர் இந்திரா காந்தியால் ஏப்ரல் 1, 1973 இல் தொடங்கப்பட்டது. விருதுகளும் கௌரவங்களும் ஆசிய செஸ் சிறப்பு விருதுகள் 2023 மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆண்டின் சிறந்த நபர் விருது வழங்கப்பட்டது. ஒலிம்பியாடில் போர்டு நம்பர் ஒன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறந்த செயல்திறனுக்காக, கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் ஆண்டின் சிறந்த வீரர் விருதைப் பெற்றார்.