புவியியல்

இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள்

இயற்கை பேரிடர் பாதிப்புகளைக் களைய நவீன செயல்திறன்

  • இயற்கை பேரிடர்களைக் கையாளும்போது எதிர்வினையைவிட செயலுக்கு முக்கியத்துவம் அளித்து வருங்கால தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதிப்பைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
  • புது தில்லியில், தேசிய அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு கருத்தரங்கின் 3-ஆவது அமர்வை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்புப் பணிகளில் சிறந்து பணியாற்றிய வீரர்களுக்கு “சுபாஷ் சந்திர போஸ் ஆப் த பிரபந்தன்“  விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
  • நாட்டில் முதல் முறையாக 2001 – ஆம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு பிறகு குஜராத்தில்தான் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது.  பின்னர், குஜராத்தின் சட்டத்தை  அடிப்படையாகக் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் கடந்த 2005 – ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், அமைக்கப்பட்டது.
  • பேரிடர் பாதிப்புகளைச் சிறப்பாக கையாள வருங்கால தொழில்நுட்பத்தை மையப்படுத்தி நகரங்களின் உள்கட்டமைப்பைத் திட்டமிட வேண்டும்.

இந்தியாவைத் தவிர்த்துவிட்டு பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண முடியாது.

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கை வகிக்கவுள்ளன.  அத்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.  சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும்.
  • 2030 – ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி வேகமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது.  கடந்த 2018 – 2021 காலகட்டத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தியை 31 டெரா வாட் அளவுக்கு இந்தியா அதிகரித்துள்ளது.
Next புவியியல் >

People also Read