பாதுகாப்பு

கே-4 ஏவுகணை சோதனை

  • பின்னணி:  இந்தியா ஐஎன்எஸ் அரிஹாட் கப்பலில் இருந்து கே-4 என்ற இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்தது.
  • முக்கியத்துவம்:   இந்தியாவின் கடல்சார் அணுசக்தி தடுப்புச் சக்தியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல்.
  • கே-4 ஏவுகணை அம்சங்கள்:
  • இது திட எரிபொருள் கொண்ட கே-4 பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
  • 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது .
  • 2 டன் வரை அணு ஆயுதப் போர்க்கருவியை சுமந்து செல்ல முடியும்.

ஐஎன்எஸ் அரிஹாட்

  • நீர்மூழ்கிக் கப்பல்: ஐஎன்எஸ் அரிஹாட், இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி மூலம் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் (SSBN).
  • எடை: 6,000 டன்கள்.
  • இதற்கு முந்தையது: ஐஎன்எஸ் அரிஹந்த் (2018-ல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தது). 
  • இது 750 கி.மீ. தூரம் செல்லக்கூடிய K-15 ஏவுகணைகளை மட்டுமே கொண்டது.
Next Current Affairs பாதுகாப்பு >