தினசரி தேசிய நிகழ்வுகள்

சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி

  • உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் இந்திய ராணுவத்தின் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக  கேப்டன் கீதிகா கவுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சியாச்சின் போர்ப்பள்ளியில்  பயிற்சியை  முடித்த பிறகு அவர் பணியமர்த்தப்பட உள்ளார்.

சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

  • தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
  • ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் 13வது அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள விதிகளின்படி மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >