அரசு நலத்திட்டங்கள்
மரபணுசார் ரத்தசோகை நோய் ஒழிப்புத் திட்டம்
- மரபணுசார் ரத்தசோகை நோயை (சிக்கிள் செல் அனீமியா) 2047-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கொள்கைகளையும் சிறப்பு வலைதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- அப்போது 3 கோடிக்கும் அதிகமானோருக்கு எண்ம வடிவிலான ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- மரபணுசார் ரத்தசோகை நோய்க்கு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான அட்டைகளையும் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
- மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்கு ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டை உதவும்.
- மரபணு சார் ரத்தசோகை நோயால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் இந்தியாவிலேயே உள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
- அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையில் (2021-22) வேலை வாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து 2021-இல் அரசாணை வெளியிடப்பட்டது.
- அதன்படி, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலை வாய்ப்ப அலுவலங்களில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறைக்கும், முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்குவதற்கும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தேவையான ஆணைகள் வழங்குமாறு மனிதவள மேலாண்மை துறை கேட்டுக் கொண்டுள்ளது.