அரசு நலத் திட்டங்கள்
PMAY-U திட்டத்தின் கீழ் 75.51 லட்சம் வீடுகள்
- நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் மையத்தின் முதன்மை திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U) திட்டத்தின் கீழ் மொத்தம் 75.51 லட்சம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- அவற்றில் இதுவரை 71.39 லட்சம் வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
- அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 12,87,307 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு
- PMAY-U வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MOHUA) செயல்படுத்தப்படுகிறது.
- இது 2015 இல் தொடங்கப்பட்டது.
”ப்ரயாஸ்“ திட்டம்
- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் அம்பத்தூர் பிராந்திய அலுவலகம் சார்பில் ‘ப்ரயாஸ்’ திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு பணி நிறைவுபெறும் நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரயாஸ் திட்டம் பற்றி
- மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.