முக்கிய தினங்கள்

சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம் 

  • ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச எவரெஸ்ட் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற எவரெஸ்ட் சிகர வெற்றியாளர்களின் உச்சிமாநாட்டிற்கான கருப்பொருள் “இமயமலையின் எதிர்காலத்திற்காக குரல்களை ஒன்றிணைத்தல்” (“Uniting Voices for the Future of the Himalaya”) என்பதாகும்.

 

  • திருக்குறள் (எண் 428)
  • அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

  • பொருள்: அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
  • அதிகாரம்: அறிவு உடைமை
  • திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) (திருத்தச்) சட்டம் 2026
    • இச்சட்டம், சுய அடையாளத்திலிருந்து கட்டாய மருத்துவச் சான்றளிப்பை நோக்கி மாற்றுவதன் மூலம் சட்டப்பூர்வ பாலின அங்கீகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் கட்டாய பாலின மாற்றங்கள் அல்லது வற்புறுத்தப்படும் அடையாளங்களைத் தடுப்பதற்காக கடுமையான தண்டனை விதிகளையும் அறிமுகப்படுத்துகிறது.
    • முக்கிய விதிகள் மற்றும் திருத்தங்கள்
      • சுய-உணர்வு அடையாளத்திலிருந்து மாற்றம்: 2026 ஆம் ஆண்டு சட்டம் சுய அடையாளத்திற்கான உரிமையை நீக்குகிறது.
      • சுருக்கப்பட்ட சட்டபூர்வ வரையறை: இது திருநங்கைகளுக்கான வரையறையை குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்கள் மற்றும் இன்டர்செக்ஸ் மாறுபாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்துகிறது.
      • புதிய குற்றவியல் குற்றங்கள்:
        • தனிநபர்களை வற்புறுத்தி திருநங்கை அடையாளத்தை ஏற்க வைப்பதைத் தடுப்பதற்காக, இச்சட்டம் புதிய குற்றவியல் பிரிவுகளை அறிமுகப்படுத்துகிறது.
        • ஒரு திருநங்கை அடையாளத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்துவதற்காக வயது வந்த ஒருவரைக் கடத்துவது, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
  • ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் 
    • இந்திய இரயில்வே, நாட்டின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலன் அடிப்படையிலான ரயிலை, ஹரியானாவில் உள்ள வடக்கு இரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் தடத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

      • ஹைட்ரஜன் எரிபொருள் கலன் தொழில்நுட்பமானது, ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு வேதிவினை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதில் நீராவி மட்டுமே உமிழ்வாக வெளிவருவதால், இது புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட இரயில்வே இழுவை அமைப்புகளுக்கு ஒரு தூய்மையான மாற்றாக அமைகிறது.
      • மாதிரி பதிவு முறைமை (SRS) புள்ளிவிவர அறிக்கை 2024
      • தேசிய அளவில், 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பெண்களில் 2.1% பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள், அதே சமயம் 24.5% பேர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
      • கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பெண்கள் – அதாவது 73.5% பேர் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
      • ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இன்னும் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெண்களுக்கு 2024 ஆம் ஆண்டில் 21 வயதிற்கு முன்பே திருமணம் நடந்துள்ளது என்று இந்த அறிக்கை காட்டுகிறது.
      • நாட்டிலேயே 18 வயதிற்கு முன்பாக சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும் மிக உயர்ந்த விகிதத்தை 6.3% உடன் மேற்கு வங்கம் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் 4.9% உடன் அடுத்த இடத்தில் உள்ளது.
      • குறிப்பிடத்தக்க அளவிலான சிறுமிகளுக்கு (2.9%) அவர்கள் வயது வந்தோராக மாறுவதற்கு முன்பே தொடர்ந்து திருமணம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கரும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >