தேசிய நிகழ்வுகள்

விண்வெளி மருத்துவ ஆராய்ச்சிக்காக AIIMS நிறுவனத்துடன் இஸ்ரோ (ISRO) ஒப்பந்தம்

  • சூழல்: விண்வெளி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (AIIMS) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டுள்ளது.
  • மனித விண்வெளிப் பயணங்களின் போது மனித ஆரோக்கியம், செயல் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த கூட்டு ஆராய்ச்சியின் நோக்கம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • “தீவிர சூழல்களின் கீழ் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் பராமரிப்பதற்கும், நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கும் தேவையான பன்முகத்தன்மை கொண்ட விண்வெளி மருத்துவ நிபுணத்துவம், மருத்துவ உபகரணங்கள், நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க தரை மற்றும் விண்வெளி சார்ந்த ஆய்வுகளை நடத்துவதே இந்த ஒத்துழைப்பின் இலக்காகும்.”

 

கிசான் கடன் அட்டை (Kisan Credit Card – KCC)

  • சூழல்: கிசான் கடன் அட்டை (KCC) சிறு, குறு, குத்தகை விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் (SHGs)/இணை பொறுப்புக் குழுக்கள் (JLGs) உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் சரியான நேரத்தில், மலிவான மற்றும் பிணையம் இல்லாத (collateral-free) கடனை வழங்குகிறது.

கிசான் கடன் அட்டை பற்றிய தகவல்கள்

    • விவசாய உற்பத்திக்கான குறுகிய கால நிறுவனக் கடனை விவசாயிகள் எளிதாகவும் வேகமாகவும் பெறுவதற்காக 1998-ஆம் ஆண்டில் கிசான் கடன் அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் விவசாய நடவடிக்கைகளுக்கான நடைமுறை மூலதனம் மற்றும் முதலீட்டிற்கு நிதி உதவியை வழங்குகிறது.
  • அறுவடைக்குப் பிந்தைய செயல்முறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான செலவுகளுக்கும் இது ஆதரவளிக்கிறது, இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த அவர்களுக்கு விரிவான நிதி ஆதரவை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்ச கடன் வரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு கடன் வாங்குபவருக்கும் கிடைக்கக்கூடிய பிணையம் இல்லாத (collateral-free) கடனின் அளவு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    நடப்பு தகவல்கள்


    • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), 2026-ஆம் ஆண்டை ‘சர்வதேச பெண் விவசாயி ஆண்டாக’ அறிவித்துள்ளது.
      பிரதம மந்திரி சேது (PM-SETU) திட்டம்

      • சூழல்: மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITIs) மூலம் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பினை வழங்கும் பிரதம மந்திரி சேது (PM-SETU) திட்டத்தைக் கண்காணிக்கவும் வழிகாட்டவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்  தேசிய வழிகாட்டுதல் குழுவை (NSC) அமைத்துள்ளது. இதுவே இத்திட்டத்தின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாகும்.
      • தொழிற்பயிற்சி நிலையங்களை நவீனப்படுத்துவதன் மூலமும், மேம்படுத்துவதன் மூலமும் நாட்டின் திறன் மேம்பாட்டு அமைப்பை வலுப்படுத்துவதும், பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

      PM-SETU திட்டம் பற்றிய தகவல்கள்

      • இந்தியாவின் தொழிற்பயிற்சி முறையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு மத்திய நிதியுதவித் திட்டமாகும்.
      • நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ITIs), தொழில் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்ட பயிற்சி மையங்களாக மாற்றி நவீனப்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

      செயல்படுத்தும் முறை

      • இத்திட்டம் ஹப் அண்ட் ஸ்போக் (Hub-and-Spoke) மாதிரியைப் பின்பற்றுகிறது.இதில் 200 தொழிற்பயிற்சி நிலையங்கள் மையங்களாகவும் (Hubs), 800 தொழிற்பயிற்சி நிலையங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்ட கிளைகளாகவும் (Spokes) செயல்படும்.
      • மைய நிறுவனங்களுக்கு நவீனக் கட்டமைப்பு, புத்தாக்கம் மற்றும் அடைகாத்தல் (incubation) வசதிகள், உற்பத்தி அலகுகள், பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு சேவைகள் வழங்கப்படும்.
      • பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், சென்றடைய வேண்டிய இடங்களுக்குப் பயிற்சியைக் கொண்டு சேர்க்கவும் கிளை நிறுவனங்கள் உதவும்.

      நிதி ஒதுக்கீடு

      • ஐந்தாண்டு காலத்திற்கு இத்திட்டத்திற்காக மொத்தம் 60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

      தலைமை அமைச்சகம்

      • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
        நடப்பு தகவல்கள்


        • 2017-ஆம் ஆண்டில் ஜோஹா அரிசிக்கு புவிசார் குறியீடு (GI tag) வழங்கப்பட்டது.
          பக் பவுண்டி (Bug Bounty) திட்டம்

          • சூழல்: ஆதார் சுற்றுச்சூழல் அமைப்பின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தனது முதல் முறையான ‘பக் பவுண்டி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

          பக் பவுண்டி திட்டம் பற்றிய தகவல்கள்

          • பக் பவுண்டி திட்டம் என்பது ஒரு இணையப் பாதுகாப்பு முன்னெடுப்பாகும். இதில் நிறுவனங்கள், தங்கள் டிஜிட்டல் அமைப்புகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிய அறமுறை ஊடுருவலாளர் (ethical hackers) பாதுகாப்பு நிபுணர்களையும் அழைக்கின்றன.
          • சைபர் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே, பாதுகாப்பு குறைபாடுகளைப் பொறுப்புடன் தெரிவிக்கும் பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

          திட்டத்தின் நோக்கம்

          • டிஜிட்டல் தளங்களில் உள்ள சாத்தியமான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அதன் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
          • பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைப் பொறுப்புடன் தெரிவிப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல்.

          முக்கிய அம்சங்கள்

          • டிஜிட்டல் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிவதில் அனுபவம் வாய்ந்த 20 தேர்ந்தெடுக்கப்பட்ட அறமுறை ஊடுருவலாளர்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் இத்திட்டத்தில் உள்ளனர்.
          • UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம், myAadhaar தளம் மற்றும் பாதுகாப்பான QR குறியீடு செயலி போன்ற முக்கியமான டிஜிட்டல் தளங்களை இவர்கள் ஆய்வு செய்வார்கள்.
          • பாதுகாப்பு குறைபாடுகள் ‘மிக முக்கியம்’ (Critical), ‘அதிகம்’ (High), ‘நடுத்தரம்’ (Medium) மற்றும் ‘குறைவு’ (Low) என வகைப்படுத்தப்படும். கண்டறியப்பட்ட பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப வெகுமதிகள் வழங்கப்படும்.
          • இணையப் பாதுகாப்பு தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ‘ComOlho IT Private Limited’ நிறுவனத்துடன் இணைந்து இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படுகிறது.
          • ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தணிக்கைகள், பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றுடன் இந்தத் திட்டம் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

          நடப்பு தகவல்கள்


          • உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா, நிலக்கரியைப் பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் இது நிலக்கரியைச் பெருமளவில் சார்ந்து இருக்கிறது.
            இந்தியாவின் முதல் சுயசார்பு கடல்சார் கப்பல் கட்டுதல் மற்றும் அமைப்புகளுக்கான  மையம்

            • பின்னணி : இந்தியாவின் முதல் சுயசார்பு கடல்சார் கப்பல் கட்டுதல் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தை (Autonomous Maritime Shipbuilding and Systems Centre) ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.
            • இந்த வசதி ‘சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங்’ (Sagar Defence Engineering) நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது.
            • இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஜுவ்வலதின்னே (Juvvaladinne) மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ளது.
            • இந்தியாவின் கடல்சார் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
            • உள்நாட்டு சுயசார்பு கடல்சார் தொழில்நுட்பங்களின் (indigenous autonomous maritime technologies) உருவாக்கத்திற்கு இது ஆதரவளிக்கும்.

 

Next தேசிய நிகழ்வுகள் >