யுனிசெஃப்’ தூதர்
- குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐ.தா.வின் அமைப்பான யுனிசெஃப் இந்தியா பிரிவின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பாராட்டுப் பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக யுனிசெஃப் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கும் பிரபலங்களின் குழுவில் இணைந்துள்ளார்.
- யுனிசெஃப் இந்தியாவுக்கான பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி ஆவர்.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்(யுனிசெஃப்)
- 1965 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு.
- நிறுவப்பட்ட ஆண்டு: 1946,
- நிறுவப்பட்ட இடம் – நியூயார்க், அமெரிக்கா
- ஐ.நா.வால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச உதவி அமைப்பு.
- “நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறைப்பதை இதன் முயற்சிக்யாக கொண்டு உள்ளது.
- 1950 களின் முற்பகுதியில் இருந்து, இந்த அமைப்பு வளரும் நாடுகளை இலக்காகக் கொண்ட நீண்டகால நோக்கங்களை நிர்ணயித்தது.

