Tag: ராஜாஜி

சிறந்த நபர்கள்

மருது பாண்டியர்கள் - சிவகங்கையின் மாவீரர்கள் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பெரியமருது 1748 இல் பிறந்தார் மற்றும் சின்னமருது 1753 இல் பிறந்தார். பெற்றோர்: விருதுநகர் மாவட்டம், முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சேர்வை பொன்னாத்தாள். இரு சகோதரர்களும் இராணுவ சேவையில் பயிற்சி பெற்றவர்கள். ஆங்கிலேயர்களுடன் மோதல் சிவகங்கை இளவரசர்கள் ஆற்காடு நவாபுக்கு கப்பம் செலுத்தாததால் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். மன்னர் முத்துவடுகநாதர் போரில் வீரமரணம் அடைந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மருது பாண்டியர்கள், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் உதவியுடன் ராணி வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். பட்டங்களும் கௌரவங்களும் மருது பாண்டியர்களுக்கு ஆங்கிலேயர்கள் "சேர்வைக்காரர்கள்" என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினர். பிடிப்பு மற்றும் மரணதண்டனை 1801 அக்டோபர் 19 அன்று சோழபுரம் காட்டில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டனர். 24 அக்டோபர் 1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். நினைவுகூரல் 2026 ஆம் ஆண்டு மக்கள் தொடர்புத் துறை மானியத்திற்காக, தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட தீர்க்கமான போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களின் சிலை நிறுவப்பட்டது ராஜாஜி ராஜாஜி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1878 டிசம்பர் 10-ஆம் தேதி பிறந்தார். ரௌலட் சட்டத்துக்கு எதிராக ஒத்துழைப்பு இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார். வைக்கம் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தார். 1937–1940: மதராஸ் மாகாண முதலமைச்சராக இருந்தார்.. ஜெர்மனிக்கு எதிரான போரை பிரிட்டிஷ் தொடுத்த காலத்தில் மகாத்மா காந்தியின் வெள்ளை வெளியேறு போராட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முகமது அலி ஜின்னா மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண முயன்றார்.இதன் திட்டத்தை “சி. ஆர். ஃபார்முலா” என அழைத்தனர். 1946: இடைச் கால அரசில் மத்திய தொழிற்சாலைகள், கல்வி, நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1947–48 ல் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினார். இவர் 1948 ஜூன் 21 – 1950 ஜனவரி 26 வரை சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் . ராஜாஜி 94 வயதில் 1972 டிசம்பர் 25-ஆம் தேதி காலமானார்.