Tag: ஐஎன்எஸ் சாகர்த்வனி

பாதுகாப்பு

ஐஎன்எஸ் சாகர்த்வனி பின்னணி : ராயல் மலேசிய கடற்படையுடனான தனது வெற்றிகரமான பணியை நிறைவுசெய்த பிறகு, ஐஎன்எஸ் சாகர்த்வனி மலேசியாவின் போர்ட் கிளாங்கிலிருந்து புறப்பட்டது. இந்தப் பயணம், நீரியல் வரைவியல், கடல்சார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் கடலியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில்முறை மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டிருந்தது. ஐஎன்எஸ் சாகர்த்வனி பற்றி  ஐஎன்எஸ் சாகர்த்வானி என்பது ஜூலை 1994 இல் கடற்படையில் இணைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட கடல்சார் ஆராய்ச்சி கப்பல் ஆகும். இது நவீன கடல் அறிவியல் ஆய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டது.  “சாகர்த்வானி” என்ற பெயருக்கு “கடலின் குரல்” என்று பொருள். இது அதன் கடல் ஆராய்ச்சிப் பணியை பிரதிபலிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் கொச்சியிலுள்ள கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தால் (NPOL) வடிவமைக்கப்பட்டு, கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்டது.