Tag: இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்க அபாய விவாதம்

புவியியல்

புவியியல் நிலப்பகுதிகள் இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்க அபாய விவாதம் சூழல் : இமயமலை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள கட்டுமானங்களுக்கான நிலநடுக்க அபாயங்கள் அதிகமாக மதிப்பிடப்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த அறிக்கை அமைச்சரவை செயலகத்திடம்  சமர்ப்பிக்கப்பட உள்ளது. தரநிலைகளைத் திரும்பப் பெறுதல்  இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS), திருத்தப்பட்ட IS 1893 (2025) வழிகாட்டுதல்களைத் திரும்பப் பெற்றுள்ளது. கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், மெட்ரோ இரயில் போன்ற தற்போதைய மற்றும் எதிர்கால உள்கட்டமைப்புத் திட்டங்கள் கணிசமாகப் பாதிக்கப்படலாம் என்ற கவலையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் நிலநடுக்க மண்டலங்கள்  இந்தியா நான்கு நிலநடுக்க மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (மண்டலம் II முதல் V வரை). இதில் மண்டலம் V (இமயமலைப் பகுதி) மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் ரிக்டர் அளவில் 8 Magnitude வரையிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இவை கடுமையான கட்டுமானச் சேதங்களை உண்டாக்கும் திறன் கொண்டவை. முன்மொழியப்பட்ட அதிகபட்ச தரை முடுக்கம் (PGA) மதிப்புகள் தற்போதைய இந்தியத் தரநிலைகளில் உள்ள குறைந்த மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, மேம்படுத்தப்பட்ட மாதிரி 0.15 g முதல் 0.75 g வரையிலான (உலகளவில் இதைவிட அதிகமானது) PGA (Peak Ground Acceleration) மதிப்புகளைப் பரிந்துரைக்கிறது. உலகளாவிய ஒப்பீடு  ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக முடுக்க மதிப்புகளுக்கு (சுமார் 1 g அல்லது அதற்கு மேல்) ஏற்ப வடிவமைக்கின்றன, ஆனால் இந்தியாவின் தற்போதைய தரநிலைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே கருதப்படுகின்றன நடப்பு தகவல்கள்   இந்தியாவின் லட்சியமிக்க எரிசக்தி மாற்ற இலக்குகள் — 2030-க்குள் 300 ஜிகாவாட் நிறுவப்பட்ட சூரியசக்தித் திறனைக் கொண்டிருப்பதும், 2070-க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதும் ஆகும்.