Tag: இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதித் தடை

இந்தியப் பொருளாதாரம்

இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதித் தடை சூழல்: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), அனைத்து வகையான கச்சா, வெள்ளை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதியையும் "தடை செய்யப்பட்ட" பிரிவின் கீழ் வைத்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இது தற்போதைய 2025–26 சர்க்கரைப் பருவத்தின் இறுதி வரை, அதாவது செப்டம்பர் 30, 2026 வரை தொடரும். ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் அமெரிக்காவிற்கான (US) முன்னுரிமை ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களின் கீழ், சுமார் 14,500 டன் சர்க்கரை ஏற்றுமதி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தடைக்கான காரணங்கள் எல் நினோ' (El Nino) நிகழ்வின் தாக்கத்தால் பருவமழை மற்றும் கரும்பு உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்ற கவலைகள். ஈரான் விவகாரம் போன்ற உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களும் இந்த முடிவிற்கு முக்கியக் காரணங்களாகும். உற்பத்தி மற்றும் இருப்பு விவரங்கள் 2025–26 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி சுமார் 279 லட்சம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2025 நிலவரப்படி, தொடக்க இருப்பு 50 லட்சம் டன்களுக்கும் அதிகமாக உள்ளது. நோக்கம் உலகளாவிய மற்றும் காலநிலை சார்ந்த நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலை உயர்வைக்கட்டுப்படுத்தவும், சர்க்கரை தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தி உலக அளவில், இந்தியா சர்க்கரையை அதிகம் நுகரும் நாடாகவும், சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவில் கரும்பு உற்பத்தித்திறனில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கரும்புப் பயிர் குறித்த விவரங்கள் கரும்பு உற்பத்திக்கு 21°C முதல் 27°C வரையிலான வெப்பநிலையும், 75 முதல் 150 செ.மீ வரையிலான மழைப்பொழிவுடன் கூடிய ஈரப்பதமான காலநிலையும் தேவைப்படுகிறது. வட இந்தியாவை ஒப்பிடுகையில், தென் இந்தியாவின் வெப்பமண்டலக் காலநிலை காரணமாக, இங்கு விளையும் கரும்பில் சுக்ரோஸ் (சர்க்கரைச் சத்து) அளவு அதிகமாக உள்ளது; மேலும் ஒரு ஹெக்டேருக்கான விளைச்சலும் அதிகமாகும். பயன்கள்: இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் விளையும் ஒரு பணப்பயிராகும்; இது சர்க்கரை, வெல்லம், எத்தனால் மற்றும் உயிரி ஆற்றல் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. நியாயமான மற்றும் இலாபகரமான விலை (FRP) 'நியாயமான மற்றும் இலாபகரமான விலை' (FRP) என்பது, சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை எந்த விலைக்குக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசால் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு இப்பணத்தைச் செலுத்த சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ளன. இந்த FRP விலை, வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் (CCEA) ஒப்புதல் அளிக்கப்படுகிறது.