Tag: ஆத்மநிர்பர் பாரத் அபியான் (தற்சார்பு இந்தியா இயக்கம்)

தேசிய செய்திகள்

ஆத்மநிர்பர் பாரத் அபியான் (தற்சார்பு இந்தியா இயக்கம்)  சூழல்: இந்த ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெரிவித்தார். இதுவே 'ஆத்மநிர்பர் பாரதத்தின்' (தற்சார்பு இந்தியாவின்) உண்மையான அடையாளமாகத் திகழும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆத்மநிர்பர் பாரத் அபியான் (தற்சார்பு இந்தியா இயக்கம்) 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா இயக்கம்) என்பது இந்தியாவின் பொருளாதார மாற்றம் மற்றும் தற்சார்புக்கான பரந்த தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது.  இந்த முன்னெடுப்பு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் தேசிய தற்சார்பை வளர்க்கும் அதே வேளையில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.  துறைசார்ந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளின் மூலம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை மேம்படுத்துதல், உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம், நெருக்கடி காலத்தை பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் உள்நாட்டு வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது.  மகா உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள "வசுதைவ குடும்பகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு, இந்த முன்னெடுப்பு உலகிலிருந்து தனித்திருப்பதை ஆதரிக்கவில்லை. மாறாக, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல், இந்தியத் தொழில்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் சர்வதேச சந்தை மற்றும் விநியோகச் சங்கிலி வலைப்பின்னலில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இது ஒரு உத்திசார் தற்சார்பை ஊக்குவிக்கிறது. ஆத்மநிர்பர் பாரத் அபியானின் நோக்கங்கள் உள்நாட்டுத் தொழில்களின் மேம்பாடு ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பு கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார மீட்பு முக்கிய பொருளாதாரத் துறைகளில் சீர்திருத்தங்கள் விவசாயிகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு வாழ்க்கைத் தர மேம்பாடு   நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad)  சூழல்: நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad) கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad)   கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாற்கர நாடுகள் உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு செயல்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் உறுப்பு நாடுகளில் ஒன்று கூட்டமைப்புக்கு தலைமை ஏற்கும் நிலையில், நிகழாண்டு இந்தியா தலைமையில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad)  உச்சிமாநாடு நடை பெறவுள்ளது.  நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad) பற்றி  நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad) என்பது 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியிற்குப் பிந்தைய மனிதாபிமான ஒருங்கிணைப்பிலிருந்து உருவானது. இது 2007 ஆம் ஆண்டில் ஷின்சோ அபே என்பவரால் முன்மொழியப்பட்டது. பின்னர் 2008 இல் செயலற்ற நிலைக்குச் சென்ற இந்த அமைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும்…