UNEP-இன் புவிக்கான சாதனையாளர்கள் விருது 2025 சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளர், சுப்ரியா சாஹு (தமிழ்நாடு), UNEP-இன் புவிக்கான சாதனையாளர்கள் விருது 2025 ஐ வென்றுள்ளார். புவிக்கான சாதனையாளர்கள் விருதுஎன்பது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கவுரவமாகும். இந்த விருதை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆண்டுதோறும் வழங்குகிறது. திருமதி. சாஹு, "உத்வேகம் மற்றும் செயல்" எனும் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பிரிவு, மக்களுக்கும் கிரகத்திற்கும் அளவிடக்கூடிய நன்மைகளை வழங்கும் தலைவர்களை அங்கீகரிக்கிறது. தேசிய கைவினைப் பொருட்கள் விருதுகள் 2023 மற்றும் 2024 மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருதுகள் (உயர்ந்த கவுரவம்) மற்றும் தேசிய விருதுகளை புது டெல்லியில் வழங்கினார். விருது பெற்றவர்கள் சில்ப் குரு விருது 2023 அஜித்குமார் தாஸ் ( மேற்கு வங்கம்) - கையால் வரையப்பட்ட துணிகள் டி சிவம்மா (ஆந்திரப் பிரதேசம்) - தோல் பொம்மைகள் தேசிய விருது 2023 ஹிராபாய் ஜரேகா பாகெல் (சத்தீஸ்கர்) - உலோக கைவினை இம்தியாஸ் அஹமத் (உத்தரப் பிரதேசம்) - கையால் செய்யப்பட்ட கம்பளம் ரோஷன் சிப்பா (ராஜஸ்தான்) - கலைத் துணிகள் சில்ப் குரு விருது 2024 சுபாஷ் அரோரா (ஹரியானா) -உலோக கைவினை முகமது தில்ஷாத் (உத்தரப் பிரதேசம்) - மரச் செதுக்குதல் தேசிய விருது 2024 டி பாஸ்கரன் (தமிழ்நாடு) - கற் செதுக்குதல் ரூபான் சித்ரகார் (மேற்கு வங்கம்) - ஓவியம் பல்டேவ் பாக்மாரே (மத்தியப் பிரதேசம்) - பழங்குடியின கைவினைஞர்கள் பிரிவு மொத்த விருதுகள் சில்ப் குரு விருதுகள்: மொத்தம் 12 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது (2023 மற்றும் 2024 இரண்டிற்கும் சேர்த்து). தேசிய விருதுகள்: மொத்தம் 36 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது (இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து).

