இந்தியப் பொருளாதாரத்தில் தற்போதைய போக்குகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவை கணிப்பதாக மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதன் அளவுகோலாகவும் பார்க்கப்படுகிறது. 1948 சென்சஸ் சட்டத்தின் அடிப்படையில் அந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் அரசின் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. “கதைகளின் அடிப்படையில் வரலாறு எழுதிய காலம் மாறி 21-ஆம் நுாற்றாண்டில் தரவுகள்தான் வரலாற்றைத் தீர்மானிக்கும்“ பிரதமர் நரேந்திர மோடி. இளைஞர்களின் திறன் மேம்பாட்டால் நாடு 3ஆவது பெரிய பொருளாதாரமாகும் பல்வேறு துறைகளில் காணப்படும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம். உலகின் 5 –ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது. .இளைஞர்களின் திறனை மேம்படுத்தினால் மட்டுமே நாட்டை 3-ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை அடைய முடியும். நாட்டில் தற்போது சுமார் 90,000