Tag: மத்திய அரசு மாபெரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்த உள்ளது

தேசிய நிகழ்வுகள்

மத்திய அரசு மாபெரும் செயற்கை நுண்ணறிவு  உச்சி மாநாட்டை நடத்த உள்ளது சூழல்: இந்தியா பிப்ரவரி மாதம் செயற்கை நுண்ணறிவு  உச்சி மாநாட்டை நடத்த உள்ளது, இதற்கான ஏற்பாடுகள் 2023 ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இணையான அளவில் நடைபெற்று வருகின்றன. முக்கிய உச்சி மாநாட்டில் சுமார் 1,00,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, 2023-ல் பிளெட்ச்லி பார்க்கில் (இங்கிலாந்து) தொடங்கிய வருடாந்திர பலதரப்பு மாநாட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும். அதைத் தொடர்ந்து சியோல் (2024) மற்றும் பாரிஸ் (2025) ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டின் 2026 பதிப்பை நடத்த இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026, பாரத் மண்டபம், புதுதில்லியில் நடைபெறவுள்ளது. முக்கிய விவாதத் தலைப்புகள் செயற்கை நுண்ணறிவும் அதன் வேலையிடத் தாக்கமும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறிப்பிட்ட தொழில்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்.