Tag: சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம்

முக்கிய தினங்கள்

சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம்  ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச எவரெஸ்ட் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற எவரெஸ்ட் சிகர வெற்றியாளர்களின் உச்சிமாநாட்டிற்கான கருப்பொருள் "இமயமலையின் எதிர்காலத்திற்காக குரல்களை ஒன்றிணைத்தல்" ("Uniting Voices for the Future of the Himalaya”) என்பதாகும்.   திருக்குறள் (எண் 428) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். பொருள்: அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். அதிகாரம்: அறிவு உடைமை திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) (திருத்தச்) சட்டம் 2026 இச்சட்டம், சுய அடையாளத்திலிருந்து கட்டாய மருத்துவச் சான்றளிப்பை நோக்கி மாற்றுவதன் மூலம் சட்டப்பூர்வ பாலின அங்கீகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் கட்டாய பாலின மாற்றங்கள் அல்லது வற்புறுத்தப்படும் அடையாளங்களைத் தடுப்பதற்காக கடுமையான தண்டனை விதிகளையும் அறிமுகப்படுத்துகிறது. முக்கிய விதிகள் மற்றும் திருத்தங்கள் சுய-உணர்வு அடையாளத்திலிருந்து மாற்றம்: 2026 ஆம் ஆண்டு சட்டம் சுய அடையாளத்திற்கான உரிமையை நீக்குகிறது. சுருக்கப்பட்ட சட்டபூர்வ வரையறை: இது திருநங்கைகளுக்கான வரையறையை குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்கள் மற்றும் இன்டர்செக்ஸ் மாறுபாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்துகிறது. புதிய குற்றவியல் குற்றங்கள்: தனிநபர்களை வற்புறுத்தி திருநங்கை அடையாளத்தை ஏற்க வைப்பதைத் தடுப்பதற்காக, இச்சட்டம் புதிய குற்றவியல் பிரிவுகளை அறிமுகப்படுத்துகிறது. ஒரு திருநங்கை அடையாளத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்துவதற்காக வயது வந்த ஒருவரைக் கடத்துவது, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்  இந்திய இரயில்வே, நாட்டின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலன் அடிப்படையிலான ரயிலை, ஹரியானாவில் உள்ள வடக்கு இரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் தடத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் கலன் தொழில்நுட்பமானது, ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு வேதிவினை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதில் நீராவி மட்டுமே உமிழ்வாக வெளிவருவதால், இது புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட இரயில்வே இழுவை அமைப்புகளுக்கு ஒரு தூய்மையான மாற்றாக அமைகிறது. மாதிரி பதிவு முறைமை (SRS) புள்ளிவிவர அறிக்கை 2024 தேசிய அளவில், 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பெண்களில் 2.1% பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள், அதே சமயம் 24.5% பேர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பெண்கள் - அதாவது 73.5% பேர் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இன்னும் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெண்களுக்கு 2024 ஆம் ஆண்டில் 21 வயதிற்கு முன்பே திருமணம் நடந்துள்ளது என்று இந்த அறிக்கை காட்டுகிறது. நாட்டிலேயே 18 வயதிற்கு முன்பாக சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும் மிக உயர்ந்த விகிதத்தை 6.3% உடன் மேற்கு வங்கம் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் 4.9% உடன் அடுத்த…