Tag: ஆலிவ் ரிட்லி ஆமை பாதுகாப்பு

புவியியல்

சுற்றுச்சூழல் ஆலிவ் ரிட்லி ஆமை பாதுகாப்பு  பின்னணி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு மேலாண்மை ஆணையம் மற்றும் கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தின் அதிகாரிகள், ஹோப் தீவில் கிட்டத்தட்ட 20,000 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளனர். கோரிங்கா வனவிலங்கு சரணாலயம் இது ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளைக்  கொண்டுள்ளது. ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஆலிவ் ரிட்லி ஆமைகள், அரிபாடா எனப்படும் தங்களின் பெருங்கூட்டமாக முட்டையிடும் நடத்தைக்காக அறியப்படுகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமையானது சர்வதேச யூசிஎன் (IUCN) அமைப்பால் 'பாதிக்கப்படக்கூடிய இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.