தேசிய திட்டங்கள்

ஏகலவ்ய மாதிரி குடியிருப்பு பள்ளிகள் (EMRS)

சூழல்: சுமார் 600 ஏகலவ்ய பள்ளி மாணவர்கள் IIT-JEE, NEET தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இது இந்திய அரசின் பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் முதன்மை நடவடிக்கையாகும், இது தொலைதூரப் பகுதிகளில் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பட்டியலிடப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு தரமான உரைவிடத்துடன் கூடிய கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களை கல்வியில் சிறந்த வாய்ப்புகளை அணுக உதவுவதும் அவர்களை பொது மக்களுக்கு நிகராக கொண்டுவருவதும் நோக்கமாகும்.

இந்த திட்டம் 1998 முதல் செயல்பாட்டில் உள்ளது மற்றும் புவியியல் அணுகலை விரிவுபடுத்தவும் வசதிகளின் தரத்தை மேம்படுத்தவும் 2018-19 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

50% க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்தொகை மற்றும் குறைந்தது 20,000 பழங்குடியின மக்கள் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் EMRS கள் அமைக்கப்படும்.

Next Current Affairs தேசிய திட்டங்கள் >