தமிழ்நாடு நிகழ்வுகள்

“சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், தமிழக கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொடங்கிய 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திசை, இன்று மாலையில் நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோர காவல்படை, குற்றப்பிரிவு போலீஸார் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மொத்தம் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >