முக்கிய தினங்கள்
உலகளாவிய பெற்றோர் தினம் – ஜூன் 01
- உலகளாவிய பெற்றோர் தினம் 2025 ஜூன் 1ல், UNICEF, UNESCO மற்றும் பிற நிறுவனங்களின் உலகளாவிய பிரச்சாரங்களுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
- இது நேர்மறையான பெற்றோர் நடைமுறைகள், பராமரிப்பாளர்களுக்கான மனநல விழிப்புணர்வு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் பெற்றோர் ஈடுபாட்டின் தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
- 2025 கருப்பொருள் – ” Raising Parents “.
சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்
இந்தியாவுடன் சிக்கிமின் ஒருங்கிணைப்பின் 50வது ஆண்டு விழா
- பிரதமர், இந்திய ஒன்றியத்துடன் சிக்கிம் ஒருங்கிணைந்ததின் 50வது ஆண்டு விழாவை வாழ்த்தினார். 1975, மே 16ல் இந்தியாவின் 22வது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
சிக்கிமின் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு பற்றிய முக்கிய தகவல்கள்
- சிக்கிம் 1642 முதல் 1975 வரை சோக்யால் வம்சத்தால் ஆளப்பட்ட பரம்பரை முடியாட்சி நாடாக இருந்தது.
- சிக்கிம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி மற்றும் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பின்வரும் ஒப்பந்தங்கள் மூலம் தன் சுயாட்சியை பராமரித்தது: தும்லாங் ஒப்பந்தம் (1861), திதாலியா ஒப்பந்தம் (1817), கல்கத்தா மாநாடு (1890).
- இந்தோ-சிக்கிம் ஒப்பந்தம் (1950): இது சிக்கிமை இந்தியவின் கீழ் பாதுகாப்பு நாடாக மாற்றியது. இந்தியா பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தொலைத்தொடர்பைக் கட்டுப்படுத்தியது, அதே நேரத்தில் சிக்கிம் உள்நாட்டு சுயாட்சியை தக்கவைத்துக்கொண்டது.
- 1975ல் நடந்த வாக்கெடுப்பில் தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்றனர், இதில் 97% பேர் சிக்கிம் முடியாட்சியை ஒழித்து இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர்.
- 35வது திருத்தச் சட்டம், 1974: சிக்கிமின் பாதுகாப்பு நாட்டு நிலை முடிவுக்கு வந்து, சிக்கிம் இந்தியாவின் ‘இணை மாநில’ அந்தஸ்து பெற்றது.
- 36வது திருத்தச் சட்டம், 1975: இது சிக்கிமை இந்தியாவில் முழுமையான மாநிலமாக மாற்றியது.
புகழ்பெற்ற நபர்கள்
பண்டித் தீன்தயாள் உபாத்யாயாவின் 60வது ஆண்டு விழா
- 2025 பண்டித் தீன்தயாள் உபாத்யாயாவின் ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ தத்துவத்தின் 60வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.
- காலனித்துவத்திற்குப் பிந்தைய ஆட்சிக்கான உள்நாட்டு தத்துவத்திற்கான தேடலில், பண்டித் தீன்தயாள் உபாத்யாயா (1916–1968) 1965ல் ஒருங்கிணைந்த மானுடவாதம் (ஏகாத்ம மானவ் தர்ஷன்) கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
- இக்கொள்கை பொருள் முன்னேற்றத்துடன் ஆன்மீக மேம்பாட்டை சமநிலைப்படுத்தவும் இந்திய நாகரிகக் கண்ணோட்டத்தில் வளர்ச்சியை மறுவரையறை செய்யவும் நோக்கமாகக் கொண்டது.