ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிக்கை
- பின்னணி : இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 5.25% என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவித்துள்ளார்.
- 2026-27 நிதியாண்டிற்கான (FY27) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்துள்ளது
- 2026-27 நிதியாண்டிற்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம், முன்னதாகக் கணிக்கப்பட்ட 4.5 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது.
பணவியல் கொள்கைக் குழு (MPC) பற்றி
- அமைப்பு
- 1934-ஆம் ஆண்டின் RBI சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- நோக்கம்
- பணவீக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள் (தற்போது 4% +/- 2%) பராமரிப்பதற்காக கொள்கை வட்டி விகிதத்தைத் தீர்மானித்தல்.
- உறுப்பினர்கள் (மொத்தம் 6):
- RBI ஆளுநர் (தலைவர்)
- RBI துணை ஆளுநர்
- RBI அதிகாரி (ஒருவர்)
- மத்திய அரசு நியமிக்கும் நிபுணர்கள் (மூவர்)
- கூட்டங்கள்
- ஆண்டுக்குக் குறைந்தது நான்கு முறையாவது கூட வேண்டும்.
- முடிவெடுப்பதற்கான கோரம்
- முடிவெடுப்பதற்குக் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்கள் இருப்பது அவசியம்.
- கூட்டத்தில் ஆளுநர் அல்லது துணை ஆளுநர் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும்.
- முடிவுகள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் எடுக்கப்படும் வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில், ஆளுநருக்கு தீர்மானிக்கும் வாக்கு உண்டு.
நடப்பு தகவல்கள்
- தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023.
- உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்கிள் மூலம் எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் இரண்டாவது பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

