கோவா மாநில தினம்
- கோவா மாநிலம் தனது மாநில தினத்தை மே 30 அன்று கொண்டாடுகிறது.
- கோவா, தாமன் மற்றும் தியூ ஆகியவற்றுடன் இணைந்து, 1962 ஆம் ஆண்டின் 12-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
- 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் கோவாவிற்கு முழு மாநிலத் தகுதி வழங்கப்பட்டு, அது இந்திய ஒன்றியத்தின் 25-வது மாநிலமாக மாறியது.
- இது 56-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திருக்குறள் (எண் 549)குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில்
- பொருள் : குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனை யால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
- அதிகாரம்: செங்கோன்மை
சாஞ்சி தூபி
- சாஞ்சி தூபி, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்சென் மாவட்டத்தைச் சேர்ந்த சாஞ்சி நகரில் அமைந்துள்ளது.
- இது கிமு (BCE) 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது.
- இந்தத் தூபியில் கௌதம புத்தர் மற்றும் அவருடைய மதிப்பிற்குரிய சீடர்களின் புனித உடல் எச்சங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
- சாஞ்சியில் முதலாவது முறையான ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் 1851ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டன.
- சாஞ்சி தூபி 1989ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டம்
- இந்தத் திட்டம், இதற்கு முன் நடைமுறையில் இருந்த ‘இந்திரா ஆவாஸ் யோஜனா’ (IAY) திட்டத்தை மறுசீரமைத்து, 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- வீடற்ற குடும்பங்கள் மற்றும் பூஜ்ஜியம், ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட தற்காலிகக் கூரை வீடுகளில் வாழும் தகுதியுடைய கிராமப்புறக் குடும்பங்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தரப் வீடுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டம் தொடக்கத்தில் நிதியாண்டு 2016-17 முதல் நிதியாண்டு 2023-24 வரை 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தது.
- மத்திய அரசு இத்திட்டத்தை நிதியாண்டு 2024-25 முதல் நிதியாண்டு 2028-29 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதுடன், கூடுதலாக 2 கோடி வீடுகளைக் கட்டுவதையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் (SECC 2011) கீழ் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வசதி பற்றாக்குறை அளவுகோல்கள் மற்றும் விலக்கு அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
- சமவெளிப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ₹1.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
- வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மலைப் பிரதேசங்கள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் ஒரு வீட்டிற்கு ₹1.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
- சமவெளிப் பகுதிகளில் இதற்கான செலவினம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
- வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு முறை 90:10 என்ற விகிதத்தில் உள்ளது.
- சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசே 100 சதவீத நிதியையும் வழங்குகிறது.
- இத்திட்டத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு பணிகள், ‘ஆவாஸ்சாஃப்ட்’ (AwaasSoft) மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) மற்றும் ‘ஆவாஸ்ஆப்’ (AwaasApp) போன்ற டிஜிட்டல் தளங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- PMAY-G என்பது ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு முதன்மையான கிராமப்புற வீட்டு வசதித் திட்டமாகும்.
‘மிஷன் குயின் பைனாப்பிள்’ (Mission Queen Pineapple) திட்டம்
- இது புவிசார் குறியீடு (GI-tag) பெற்ற திரிபுராவின் ‘குயின்’ அன்னாசிப்பழத்தை மேம்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியாகும்.
- இத்திட்டம் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் வழிநடத்தப்படுகிறது.
- இந்த மிஷனின் மொத்த நிதி ஒதுக்கீடு ₹236 கோடி ஆகும்.
- இத்திட்டம் நிதியாண்டு 2026-ன் இரண்டாவது காலாண்டு (Q2 FY 2026) முதல் நிதியாண்டு 2028-ன் நான்காவது காலாண்டு (Q4 FY 2028) வரை மூன்று ஆண்டுகக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL)
- தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) என்பது தமிழ்நாடு அரசால் புதிதாகத் தொடங்கப்பட்ட, மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
- இது 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டது.
- தமிழ்நாடு ஆற்றல் மேம்பாட்டு முகமை (TEDA) மற்றும் டான்ஜெட்கோ (TANGEDCO) நிறுவனத்தின் பிரத்யேக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு ஆகியவற்றை ஒன்றாக இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்பட்டது.
- 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 50 விழுக்காட்டைப் பசுமை ஆற்றல் மூலமாய் பெறவும், கார்பன் உமிழ்வை 70 விழுக்காடு வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு செயல்பாட்டு வாகனமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.

