உலக சிங்கங்கள் தினம்
- சிங்கங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 10 அன்று உலக சிங்கங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்தியாவின் தற்போதைய “Project Lion @2047” சௌராஷ்டிரா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சிங்க எண்ணிக்கையை நீண்டகாலமாக பாதுகாத்து நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- Project Lion: 2020 இல் தொடங்கப்பட்டது மற்றும் வாழ்விட மேம்பாடு மற்றும் ரேடியோ-காலர்கள் மற்றும் கேமராக்களுடன் மேம்பட்ட கண்காணிப்பு மூலம் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலக உயிரி எரிபொருள் தினம்
- உலக உயிரிஎரிபொருள் தினம் சர் ருடால்ஃப் டீசலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
- 1893 ஆம் ஆண்டில், அவர் கடலை எண்ணெயைப் பயன்படுத்தி முதல் இஞ்சினை இயக்கினார், இது நவீன உயிரிஎரிபொருட்களுக்கு அடித்தளம் அமைத்தது.
- 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் – ‘உயிரிஎரிபொருட்கள்: நிகர பூஜ்யத்திற்கான நிலையான பாதை’.
ஆகஸ்ட் 9 – ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க தினம்’ (ஆகஸ்ட் கிராந்தி திவாஸ்)
- மகாத்மா காந்தி தலைமையிலான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக் கத்தின் 83-ஆவது ஆண்டு தினம்
வரலாற்று பின்னணி:
- 1942-இல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, தேசப்பிதா மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்துமடி’ என்ற ஒப்பற்ற தாரக மந்திரத்துடன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் பட்டது.
- இது நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தை பாய்ச்சியது.
- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் முக்கிய மைல்கல்லாகும்.
- 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி மும்பை காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, ஆகஸ்ட் 9-ஆம் தேதிமுதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
- காங்கிரஸின் தலைமையில் எண்ணற்ற இந்தியர்கள், வீதிகளில் இறங்கிப் போராடி, மறக்க முடியாத சரித்திரத்தை எழுதினர்.
- பின்னர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலையில், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் அனைவரும்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 1944, மே 6-ஆம் தேதி வரை, அகாகான் மாளிகையில் மகாத்மா காந்தி வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். நேரு, படேல், ஆஸாத் உள்ளிட்டோர் அகமதாபாத் கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, 1945, மார்ச் 28 வரை அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 1921 முதல் 1945 வரையி லான காலகட்டத்தில் நேரு சிறை யில் அடைக்கப்பட்டது இது 9-ஆவது முறையாகும். மொத்தம் 9 ஆண்டுகள் அவர் சிறையில் கழித் துள்ளார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜவஹர்லால் நேரு ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’ என்ற புத்தகத்தை எழுதினார்.

