பாதுகாப்பு

சமுத்ரா சாஹஸ் பயணம் (Samudra Sahas Expedition)

  • சூழல்: இந்திய ராணுவத்தின் ஆர்டிலரி ரெஜிமென்ட்டின்) இருநூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அதன் முதல் நீல-நீர் பாய்மரப் பயணமான ‘சமுத்ரா சாஹஸ்’ மும்பையின் மார்வே பகுதியிலிருந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த 520 கடல் மைல் தூரப் பயணம் கொங்கண் கடற்கரை வழியாக மும்பையிலிருந்து விஜய்துர்க், கோவா மற்றும் மீண்டும் மும்பை என நான்கு கட்டங்களாக நடைபெறும். இதற்கு 21 அடி நீளமுள்ள சீபர்ட் (Seabird) ரக பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • பயணக் குழுவினர் கடற்கரையிலிருந்து சுமார் 7 கடல் மைல் தொலைவில், மாறுபட்ட காற்று நிலைகளுக்கேற்ப படகைச் செலுத்தி பயணிப்பார்கள்.
  • கேப்டன் க்ஷிதிஜ் நாயர் மற்றும் சுபேதார் பிரகாஷ் ஃபண்டே தலைமையில் நடைபெறும் இந்தப் பயணத்திற்கு, மேஜர் வர்தன் சித்யே தரைவழி ஆதரவை வழங்குகிறார். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மன உறுதி, குழுப்பணி மற்றும் தலைமைத்துவப் பண்புகளை ஊக்குவிப்பதாகும்.
  • இந்த சாதனைப் பயணம் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
    நடப்பு தகவல்கள்

    • எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP)ச் சட்டம், 2023
    • எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP சட்டம்), ஒரு தனிநபரின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமைகளையும், அத்தகைய தனிப்பட்ட தரவைச் சட்டப்பூர்வ நோக்கங்களுக்காகச் செயலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கும் வகையில், எண்ம தனிநபர் தரவைச் செயலாக்குவதற்கு வழிவகை செய்கிறது.
      நடப்பு தகவல்கள்

      • சுபாஷ் சந்திர போஸின் தத்துவ மற்றும் அரசியல் கோட்பாடுகள்
      • சுபாஷ் சந்திர போஸ் 1945-இல் விமான விபத்தில் காலமானார், இது முக்கியமான அறிவுசார்-அரசியல் திட்டத்தின் முடிவாக அமைந்தது.
      • அவர் கிழக்கு நாடுகளின் ஆன்மீகத்திற்கும், மேலை நாடுகளின் பொருள்முதல்வாத முன்னேற்றத்திற்கும் இடையே  “உயர்ந்த ஒருங்கிணைப்பை” உருவாக்க முயன்றார்.
      • ஆரம்பத்தில் ஆதி சங்கரர் மற்றும் வேதாந்தத்தால் ஈர்க்கப்பட்டார்.
      • புரட்சிகர நடவடிக்கைகளுக்கு நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று கூறி ‘மாயை’ (Doctrine of Maya)கோட்பாட்டை நிராகரித்தார்.
      • முழுமைவாதத்திலிருந்து  நடைமுறைவாதத்திற்கு  மாறினார்.
      • அவரது அடிப்படைக் கொள்கை: உண்மை என்பது அடிப்படையில் அன்பு மற்றும் அறநெறி சார்ந்தது.
      • ஜார்ஜ் வில்ஹெல்ம் ஃபிரெட்ரிக் ஹெகலின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.
      • சம்யவாதா கோட்பாடு (நிதானமான சமத்துவம்)
        • இது மேலைநாடுகளிடமிருந்து கடன் வாங்கப்படாத இந்தியாவின் சுதேச சித்தாந்தம் ஆகும்.
        • குறிப்பாக, பாசிசம் மற்றும் கம்யூனிசம் போன்ற ஒன்றுக்கொன்று முரணான அமைப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
        • வெளிநாட்டு சித்தாந்தங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார்.
        • இது உலகளாவிய அரசியல் சிந்தனைக்கு இந்தியாவின் பங்களிப்பாக அவர் கருதினார்.
      • சோசலிசக் கட்டமைப்பு
        • உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சமூக உரிமை.
        • அறிவியல் மற்றும் தொழில்துறை மேம்பாடு.
        • சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டது.
        • இது ஒரு மாறாத கோட்பாடு அல்ல, காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சியடையும் ஒரு துடிப்பான சித்தாந்தம்.
      • சுதந்திரம் பற்றிய பார்வை
        • சுதந்திரம் என்பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான விடுதலை:
        • சமூக சமத்துவம், பாலின சமத்துவம், பொருளாதார நீதி.
        • சாதிப் பாகுபாடு மற்றும் வகுப்புவாதத்திற்கு முடிவு கட்டுதல்.
      • பொருளாதார மற்றும் அரசியல் வரைபடம்
        • தொழில்மயமாக்கல் மற்றும் அறிவியல் திட்டமிடலை வலுவாக ஆதரித்தார்.
        • முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாதிரிகளை எதிர்த்தார் (மகாத்மா காந்தியின் கருத்துக்கு மாற்றாக).
        • முக்கியத் தொழில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை முன்மொழிந்தார்.
      • வலிமையான மத்திய அதிகாரம்
        • நாட்டின் மறுகட்டமைப்பின் போது ஒரு வலிமையான மத்திய அரசாங்கத்தை அவர் விரும்பினார்.
        • தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தற்காலிகமாக அதிகாரத்துவ ஆட்சியை (authoritarianism) பரிந்துரைத்தார்.
        • அக்கால உலகளாவிய போக்குகளால் (நாஜி ஜெர்மனி, சோவியத் ரஷ்யா, ஏகாதிபத்திய ஜப்பான்) ஈர்க்கப்பட்டார்.
        • பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் அவசர சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம் என்று அவர் நம்பினார்.
      • விமர்சனப் பார்வை
        • அவரது கருத்துக்கள் வரலாற்றுச் சூழலில் (அதிகாரத்துவ ஆட்சிகளின் எழுச்சி காலம்) வைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
        • நவீன ஜனநாயகச் சமூகங்கள், அதிகாரத்துவ ஆட்சியின் அபாயங்கள் மற்றும் செயல்திறனுக்கும் உரிமைகளுக்கும் இடையிலான சமநிலை குறித்து கேள்வி எழுப்புகின்றன


Next பாதுகாப்பு >