‘சமுத்திர பிரதாப்’
- பாதுகாப்புத் துறை அமைச்சர் கோவாவில் ஐசிஜிஎஸ் சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இது இந்திய கடலோர காவல்படைக்காக (ICG) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டு மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்களில் (PCV) முதலாவதாகும்.
- இது கோவா ஷிப்யார்டு லிமிடெட் (GSL) நிறுவனத்தால் 60%க்கும் மேற்பட்ட உள்நாட்டுப் பொருட்களுடன் கட்டப்பட்டது.
- இதன் சேர்க்கை, நாட்டின் பரந்த கடல் மண்டலங்களில் மாசுக் கட்டுப்பாடு, தீயணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விரிவான கண்காணிப்பு ஆகியவற்றில் இந்திய கடலோர காவல்படையின் திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.

