பிரக்ஞா (Prajna)
- சூழல்: பிரக்ஞா என்பது பாதுகாப்பு அமைப்புகளுக்கான நிகழ்நேர முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயற்கைக்கோள் படம்பிடிப்பு அமைப்பாகும். இது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
உருவாக்கியவர்கள்
-
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இதனை உருவாக்கியது.
- இதன் சிறப்பு ஆய்வகமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையம் (CAIR) இதனை உருவாக்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
- பெரிய அளவிலான தரவுகளை விரைவாகச் செயலாக்க முடியும்.
- பாரம்பரிய அமைப்புகளால் கண்டறிய முடியாத வடிவங்கள் மற்றும் முரண்பாடுகளை இது கண்டறியும்.
நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
- கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதை மேம்படுத்துகிறது.
- நிகழ்நேர செயல்பாட்டு பதிலளிப்புக்கு ஆதரவளிக்கிறது.
- சூழல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது.
மூலோபாய முக்கியத்துவம்
- உணர்திறன் மிக்க மற்றும் எல்லைப் பகுதிகளைக் கண்காணிப்பதற்கு பயனுள்ளது.
- சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது.
- பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் எல்லை மேலாண்மை முயற்சிகளை வலுப்படுத்துகிறது.
முக்கியத்துவம்
- பாதுகாப்பு உள்கட்டமைப்பில் இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
- செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முடிவெடுக்கும் திறன், துல்லியம் மற்றும் வேகத்தை இது மேம்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தின் சாலைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
- சூழல்: இந்தியாவில் விரைவுச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த உச்ச நீதிமன்றம் நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- நிர்வாகக் குறைபாடுகள் அல்லது உள்கட்டமைப்பு இடைவெளிகளால் நெடுஞ்சாலைகள் “ஆபத்தான பாதைகளாக” மாறக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
சாலை விபத்துக்கள் குறித்த கவலை
- தேசிய நெடுஞ்சாலைகள் மொத்த சாலை நீளத்தில் 2% மட்டுமே இருந்தாலும், சாலை விபத்து மரணங்களில் சுமார் 30% அங்குதான் நிகழ்கின்றன.
- இது தீவிரமான பாதுகாப்பு குறைபாடுகளைக் காட்டுகிறது.
அரசியலமைப்பு பார்வை
- சாலைப் பாதுகாப்பை இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்துடன் நீதிமன்றம் இணைத்துள்ளது.
- பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வது அரசின் அரசியலமைப்பு கடமை என்று அறிவித்துள்ளது.
- தனது உத்தரவுகளை அமல்படுத்த அரசியலமைப்பின் 142வது சரத்தின் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தத் தடை
- நெடுஞ்சாலைகளில் கனரக அல்லது வணிக வாகனங்களை நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் (Designated bays/lay-byes) மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு’ (ATMS)
- காவல்துறைக்கு நிகழ்நேர எச்சரிக்கைகள்
- ஜிபிஎஸ் அடிப்படையிலான புகைப்பட ஆதாரங்கள்
- ஒருங்கிணைந்த இ-சலான் அமைப்பு
நிறுவன பொறுப்புகள்
இதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:
- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH)
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
- மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்க வேண்டும்.
மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்புப் படை
- 15 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் படை அமைக்கப்பட வேண்டும்.
- இதில் நிர்வாகம், காவல்துறை, NHAI, பொதுப்பணித்துறை (PWD) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் இடம்பெறுவர்.
இதர பாதுகாப்பு நடவடிக்கைகள்
- தொடர்ச்சியான ரோந்து மற்றும் கண்காணிப்பு
- விபத்து ஏற்படும் இடங்களை (Blackspots) கண்டறிந்து சரிசெய்தல்
- சரக்குந்து தங்கும் இடங்கள் (Truck lay-bys) மற்றும் முறையான விளக்கு வசதிகளை உருவாக்குதல்
- அவசரகால மீட்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முதுவன் பழங்குடியினர்
- சூழல்: கேரளாவின் ஒரே பழங்குடியின பஞ்சாயத்தான இடமலக்குடியில், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குறைபாடுகளை கேரள உணவு ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
- இந்த விசாரணையில், பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விநியோக முறையில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- இதற்கு காரணமானவர்கள் மீது விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் வாழும் முதுவன் பழங்குடியினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
முதுவன் பழங்குடியினர் பற்றி
- முதுவன் பழங்குடியினர், ‘முதுகர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வீகக் குடிகள் ஆவர்.
- இவர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ‘முதுவன்’ மொழியைப் பேசுகிறார்கள்.
- இந்த பழங்குடியினர் மொழி ரீதியான சிறிய வேறுபாடுகளுடன் ‘மலையாள முதுவன்’ மற்றும் ‘பாண்டி முதுவன்’ என இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
- முதுவன் பழங்குடியினர் இயற்கையோடு இணக்கமான உறவைக் கொண்டவர்கள்,குறிப்பாக வனச் சூழல் மற்றும் வனவிலங்குகள் குறித்த ஆழமான புரிதலைக் கொண்டவர்கள்.
- தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இவர்கள் சிறந்த அறிவு கொண்டவர்கள்.
- இவர்களது மருத்துவ அறிவு மற்றும் பாரம்பரிய மருத்துவர்களின் பங்கு பெரும்பாலும் சமூகத்திற்குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

